13.07.2017 ஏவிளம்பி வருடம் ஆனி மாதம் 29 ஆம் நாள் வியாழக்கிழமை.
கிருஷ்ணபட்ச சதுர்த்தி திதி பகல் 1.16 வரை. அதன் மேல் பஞ்சமி திதி. சதயம் நட்சத்திரம் பின்னிரவு 10.50 வரை. பின்னர் பூரட்டாதி நட்சத்திரம் சிரார்த்த திதி தேய்பிறை பஞ்சமி. மரணயோகம் இரவு 10.50 வரை. பின்னர் சித்தயோகம் மேல் நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் ஆயில்யம், மகம். சுபநேரம் பகல் 10.45 – 11.45, ராகு காலம் 1.30 – 3.00, எமகண்டம் 6.00 – 7.30, குளிகை காலம் 9.00 – 10.30, வாரசூலம்– தெற்கு (பரிகாரம்– தைலம்)
மேடம் : சுகம், ஆரோக்கியம்
இடபம் : சோர்வு, அசதி
மிதுனம் : நன்மை, யோகம்
கடகம் : லாபம், லக்ஷ்மீகரம்
சிம்மம் : புகழ், பாராட்டு
கன்னி : உழைப்பு, உயர்வு
துலாம் : உற்சாகம், மகிழ்ச்சி
விருச்சிகம் : அமைதி, சாந்தம்
தனுசு : வெற்றி, அதிர்ஷ்டம்
மகரம் : பிரயாணம், வீண்செலவு
கும்பம் : மகிழ்ச்சி, சந்தோஷம்
மீனம் :வீண்செலவு பற்றாக்குறை
இன்று சதயம் நட்சத்திரம் யமன் இந் நட்சத்திர தேவதையாவார்.
“யம பயம் விலக இன்று திருக்கடையூர் இறைவன் அமிர்த கடேஸ்வரரையும் (சிவன்) அகிலாண்டேஸ்வரி தாயாரையும் வழிபட்டு மஹா மிருத்யுஞ்ஜய ஜபம் பண்ணுதலால் யம பயம், அகால மரணம் விலகும்”
(“பேராசையை ஒழிக்க விரும்பினால் முதலில் அதன் தாயான ஆடம்பரத்தை ஒழித்து விடுங்கள்”)
ராகு, குரு கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள் : 1, 5, 9, 3
பொருந்தா எண்கள் : 6, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள் : மஞ்சள் கலந்த வர்ணங்கள்.
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)