06.07.2017 ஏவிளம்பி வருடம் ஆனி மாதம் 22 ஆம் நாள் வியாழக்கிழமை.
சுக்கில பட்ச திரயோதசி திதி. நாள் முழுவதும். (திதி திரிதியை பிருக்கு) அனுஷம் நட்சத்திரம் பகல் 10.38 வரை. பின்னர் கேட்டை நட்சத்திரம். சிரார்த்த திதி வளர் பிறை திரயோதசி. சித்தயோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் கார்த்திகை. சுபநேரங்கள் பகல் 10.45– 11.45, ராகு காலம் 1.30– 3.00, எமகண்டம் 6.00– 7.30, குளிகை காலம் 9.00– 10.30, வாரசூலம்– தெற்கு (பரிகாரம் –தைலம்)
மேடம் : பக்தி, ஆசி
இடபம் : நலம், ஆரோக்கியம்
மிதுனம் : சுபம், மங்களம்
கடகம் : நிறைவு, பூர்த்தி
சிம்மம் : உயர்வு, மேன்மை
கன்னி : அமைதி, நிம்மதி
துலாம் : சந்தோஷம், உற்சாகம்
விருச்சிகம் : கவலை, சங்கடம்
தனுசு : இன்சொல், வரவேற்பு
மகரம் : யோசனை, பிரிவு
கும்பம் : பயம், விரோதம்
மீனம் : சினம், பகை
இன்று சுக்கிலபட்ச மஹர்பிரதோஷ விரதம் மாலை 4.30–6.00 வரை. பிரதோஷ காலத்தில் சிவன் கோயில் சென்று இறைவனையும் நந்தி தேவரையும் வழிபடல் வேண்டும். சோம சூத்திர பிரதட்சிண (பிறைவல) முறையில் வலம் வந்து பிரசாதத்தை உண்டு விரதத்தை முடிப்பது முறை. அனுஷம் நட்சத்திர தினம். மகாலஷ்மி தாயார் இந்நட்சத்திர தேவதையாவார். இன்று லஷ்மி நாராயணரை வழிபடுதல் சிறப்பாகும். திருமண தடைவிலகும்.
(எந்த புத்தி எதைக் கொடுக்கும்? “சுய புத்தி சுகத்தைக் கொடுக்கும். குரு புத்தி அறிவைக் கொடுக்கும் பிறர் புத்தி அழிவைக் கொடுக்கும். பெண் புத்தி ஆளையே கொன்று விடும்”)
சுக்கிரன், புதன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 9, 6
பொருந்தா எண்: 3, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை, நீலம், சிகப்பு
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)