அமாவாசை திதி காலை 9.10 வரை. அதன் மேல் சுக்கில பட்ச பிரதமை திதி. மிருகசீரிஷம் நட்சத்திரம் 5.57 வரை. அதன் மேல் திருவாதிரை நட்சத்திரம் பின்னிரவு 4.25 வரை. பின்னர் புனர் பூசம் நட்சத்திரம் சிரார்த்த திதி வளர்பிறை பிரதமை. சித்தயோகம் மேல் நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் கேட்டை, சுபநேரங்கள். பகல் 10.30 – 11.30, மாலை 4.30 – 5.30, ராகுகாலம் 9.00 – 10.30, எமகண்டம் -1.30–3.00, குளிகை காலம் 6.00 – 7.30, வாரசூலம் – கிழக்கு (பரிகாரம் – தயிர்) நட்சத்திர அவமாகம்
மேடம் : உற்சாகம், வரவேற்பு
இடபம் : புகழ், பெருமை
மிதுனம் : வரவு, இலாபம்
கடகம் : நன்மை, அதிர்ஷ்டம்
சிம்மம் : செலவு, விரயம்
கன்னி : பகை, விரோதம்
துலாம் : அமைதி, பொறுமை
விருச்சிகம் : நற்செய்தி, பாராட்டு
தனுசு : புகழ், செல்வாக்கு
மகரம் : திறமை, செல்வாக்கு
கும்பம் : அன்பு, பாசம்
மீனம் : லாபம், லஷ்க்மீகரம்
கண்ணன் துவாரகையில் வாழ்ந்தது உண்மையே. ஆழ்கடல் ஆராய்ச்சி தொல்லியல் ஆய்வு இதனை நிர்ணயம் செய்கின்றது. துவாரகையில் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சியில் கடலுக்குள் மூழ்கி இருப்பது கண்ணனின் அரண்மனையின் ஒரு பகுதி என்று தோன்றுகின்றது. மகாவிஷ்ணுவின் ராஜ முத்திரை கொண்ட சங்கு பதித்த தூண்கள் கடலுக்கடியில் ஆய்வு செய்து எடுக்கப்பட்டன. இவ்வாறு தொல்பொருள் ஆய்வாளர்கள் நிகழ்த்திய அகழ் ஆராய்வுகளும் கண்டு பிடிப்புகளும் நம் இதிகாச புராணங்களுக்கு மென்மேலும் பெருமை சேர்த்து கண்ணன் துவாரகையை ஆண்டதை உறுதி செய்து துவாரகை கடலில் பூகம்பத்தினால் சென்றதையும் கண்ணன் துவாபர யுகத்தின் இறுதியில் வைகுண்டம் சென்றதையும் உறுதி செய்கின்றது. சுக்கிரன், ராகு கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள் : 6,1
பொருந்தா எண்கள் : 3, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள் : பச்சை, மஞ்சள்
இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)