கிருஷ்ணபட்ச தசமி திதி முன்னிரவு 8.41 வரை. அதன் மேல் ஏகாதசி திதி. ரேவதி நட்சத்திரம் பகல் 1.21 வரை. பின்னர் அஸ்வினி நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்பிறை தசமி. சித்த யோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் உத்திரம், அஸ்தம். சுபநேரங்கள் காலை 9.30– 10.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 7.30– 9.00, எமகண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.00, வார சூலம்– கிழக்கு (பரிகாரம்–தயிர்) சுபமுகூர்த்த நாள் இன்று. திருமணம், சீமந்தம், உபநயனம், மாங்கல்யம் செய்ய, வித்யாரம்பம் செய்ய, சாந்தி முகூர்த்தம், கணபதி ஹோமம், காது குத்த நன்று. ஆனி மாதம் உபய மாதமாக இருப்பதால் கிரகாரம்பம், கிரகப் பிரவேசம் செய்தல் கூடாது.
மேடம் : நற்செய்தி, பாராட்டு
இடபம் : தனம், சம்பத்து
மிதுனம் : திறமை, முன்னேற்றம்
கடகம் : உயர்வு, மேன்மை
சிம்மம் : இன்பம், மகிழ்ச்சி
கன்னி : உழைப்பு, உயர்வு
துலாம் : நலம், ஆரோக்கியம்
விருச்சிகம் : வாழ்வு, வளம்
தனுசு : அன்பு, பாசம்
மகரம் : பக்தி, ஆசி
கும்பம் : செலவு, விரயம்
மீனம் : தெய்வதரிசனம், சுபம்
இன்று ரேவதி நட்சத்திரம். மகாபாரதத்தில் யுத்தத்தில் துரோணர், துரியோதனன், கர்ணன், அசுவத்தாமன், சல்லியன் போன்ற அதிரதர்களை தனியொரு ஆளாக நின்று எதிர்த்த அபிமன்யூ என்னும் வீரபுத்திரன் அவதரித்தது இந் நட்சத்திரத்தில். இன்று திருவரங்க நாதருக்கு விளக்குகள் ஏற்றி நெய்தானம் செய்வது உகந்தது. சூரியன், சனி கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள் : 1, 5
பொருந்தா எண்கள் : 8, 7
அதிர்ஷ்ட வர்ணங்கள் : மஞ்சள், வெளிர்நீலம்
இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீவிஸ்ணு கோயில்)