03.06.2017 ஏவிளம்பி வருடம் வைகாசி மாதம் 20 ஆம் நாள் சனிக்கிழமை.
சுக்கிலபட்ச நவமி திதி பகல் 11.24 வரை. அதன்மேல் தசமி திதி. உத்தரம் நட்சத்திரம். மாலை 5.35 வரை. பின்னர் அஸ்தம் நட்சத்திரம். சிரார்த்த திதி. வளர்பிறை தசமி. மரண யோகம். மேல் நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் அவிட்டம், சதயம். சுபநேரங்கள் பகல் 10.30 – 11.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 09.00– 10.30, எமகண்டம் 1.30– 3.00, குளிகை காலம் 6.00– 7.30. வார சூலம் – கிழக்கு. (பரிகாரம் –தயிர்).
மேடம் : பயம், கவலை
இடபம் : பொறுமை, யோகம்
மிதுனம் : நன்மை, யோகம்
கடகம் : வெற்றி, அதிர்ஷ்டம்
சிம்மம் : நலம், ஆரோக்கியம்
கன்னி : அமைதி, தெளிவு
துலாம் : நட்பு, உதவி
விருச்சிகம் : ஜெயம், புகழ்
தனுசு : யோகம், அதிர்ஷ்டம்
மகரம் : அமைதி, சாந்தம்
கும்பம் : வரவு, லாபம்
மீனம் : பகை, எதிர்ப்பு
இன்று உத்தரம் நட்சத்திரம். மகாலஷ்மி தேவி அவதரித்தது இந்நட்சத்திரத்தில். பொன்னரசி நாரணார் தேவி, புகழரசி. மின்னு நவரத்தினம் போல் மேனியழகுடையாள். அன்னையவள் வையமெல்லாம் ஆதரிப்பாள் ஸ்ரீதேவி. தன்னிரு பொற்றாளே சரண் புகுந்து வாழ்வோமே.
குரு, சூரியன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று,
அதிர்ஷ்ட எண்கள் : 1– 5
பொருந்தா எண் : 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், ஊதா நிறங்கள்