சுக்கில பட்ச சஷ்டி திதி பகல் 1.21 வரை. அதன்மேல் ஸப்தமி திதி ஆயில்யம் நட்சத்திரம். மாலை 5.04 வரை. பின்னர் மகம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை ஸப்தமி சித்தயோகம் கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: பூராடம், உத்திராடம். சஷ்டி விரதம். சுபநேரங்கள்: பகல் 10.30– 11.30, மாலை 4.30– 5.30, ராகுகாலம் 12.00– 1.30, எமகண்டம் 7.30– 9.00, குளிகை காலம் 10.30– 12.00, வாரசூலம்– வடக்கு (பரிகாரம் –பால்) கரிநாள் சுபம் விலக்குக. சஷ்டி விரதம் முருகப் பெருமானை வழிபடல் நன்று.
மேடம் : பகை, விரோதம்
இடபம் : நட்பு, உதவி
மிதுனம் : தடை, இடையூறு
கடகம் : கவனம், எச்சரிக்கை
சிம்மம் : வீண் செலவு, பற்றாக்குறை
கன்னி : அன்பு, பாசம்
துலாம் : தடை, தாமதம்
விருச்சிகம் : தனம், லாபம்
தனுசு : லாபம், லக்ஷ்மீகரம்
மகரம் : நலம், ஆரோக்கியம்
கும்பம் : சுகம், மகிழ்ச்சி
மீனம் : புகழ், பெருமை
இன்று சோமாசி மாறர் நாயனார் குருபூஜை சோழ நாட்டு திருவம்பரில் அந்தணர் குலத்தில் பிறந்தவர். சிவபெருமானை முன்னிருத்தி வேள்விகள் பல செய்தவர். சுந்தரமூர்த்தி நாயனாருக்கு நண்பராய் இருந்து அவர் திருவடிகளை வணங்கி சிவலோகம் சென்றடைந்தவர். இறையடி சேர்ந்த தினம் வைகாசி ஆயில்யம் நட்சத்திரம். (“வயதாகி விட்டது என்று ஒரு போதும் எண்ணாதீர்கள். இந்த வயதிலும் உங்களால் என்ன சாதிக்க முடியும் என்பதிலேயே கவனமாக இருங்கள்” –லிபர்மேன்) ராகு, சூரியன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6
பொருந்தா எண்: 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம், சிகப்பு
இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)