சுக்கில பட்ச பஞ்சமி திதி பிற்பகல் 2.53 வரை. அதன் மேல் சஷ்டி திதி. பூசம் நட்சத்திரம் மாலை 5.46 வரை. பின்னர் ஆயில்யம் நட்சத்திரம். சிரார்த்த திதிகள். வளர்பிறை பஞ்சமி சஷ்டி. திதித்வயம். சித்தயோகம். கரிநாள். சுபம் விலங்குக. மேல் நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் மூலம், பூராடம். சுபநேரங்கள் பகல் 10.30 – 11.30, மாலை 4.30 – 5.30, ராகு காலம் 3.00 – 4.30, எமகண்டம் 9.00 – 10.30, குளிகை காலம் 12.00 – 1.30, வாரசூலம் – வடக்கு (பரிகாரம் –பால்) ஆரண்ய கௌரி விரதம்.
மேடம் :சிந்தனை, மனக் குழப்பம்
இடபம் :இன்சொல், செல்வாக்கு
மிதுனம் : போட்டி, ஜெயம்
கடகம் : புகழ், பாராட்டு
சிம்மம் : உயர்வு, மேன்மை
கன்னி : துணிவு, வீரம்
துலாம் : விவேகம், வெற்றி
விருச்சிகம் : யோகம், அதிர்ஷ்டம்
தனுசு : ஈகை, புண்ணியம்
மகரம் : மனநிறைவு, செல்வாக்கு
கும்பம் : அமைதி, நிம்மதி
மீனம் : விவேகம், வெற்றி
சேக்கிழார் பெருமான், நபி நந்தியார் நாயனார் குருபூஜை. பக்திச் சுவை நனிசொட்டச் சொட்டப்பாடிய கவி வல்லவராம் சேக்கிழார் சுவாமிகளின் திருத்தொண்டர் புராணம் பல்வகைச் சிறப்புகளை பெற்றுள்ளமையின் “பெரிய புராணம்” என வழங்கப்பெற்று பன்னிரண்டாம் திருமுறையாக போற்றப்படுகிறது. அறுபான் மும்மை நாயனார் தம் வரலாற்றை எடுத்து இயம்பும் இக்காப்பிய நூல் 12 ஆம் திருமுறையாக போற்றப்படுகின்றது. (அச்சத்தின் வேட்கைதனை அழித்து விட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்து போகும் – பாரதியார்) குரு, செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள் : 1, 5
பொருந்தா எண்கள் : 6, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள் : மஞ்சள், நீலம்
இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)