சுக்கில பட்ச திரயோதசி திதி பின்னிரவு 12.31 வரை. அதன் மேல் சதுர்த்தசி திதி. அஸ்தம் நட்சத்திரம் பகல் 11.12 வரை. பின்னர் சித்திரை நட்சத்திரம். சிரார்த்த திதி. வளர்பிறை திரயோதசி. சித்தயோகம் சமநோக்கு. நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் சதயம், பூரட்டாதி. சுபநேரங்கள் காலை 9.30– 10.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 7.30– 9.00, எமகண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.00, வார சூலம் –கிழக்கு (பரிகாரம்– தயிர்) சுபமுகூர்த்த நாள். சுக்கில பட்ச சோம மஹா பிரதோஷ விரதம். சந்தியா காலத்தில் சிவ வழிபாடு சிறப்பானது.
மேடம் : நேர்மை, புகழ்
இடபம் : வெற்றி, அதிர்ஷ்டம்
மிதுனம் : ஆதாயம், இலாபம்
கடகம் : ஊக்கம், உயர்வு
சிம்மம் : அன்பு, பாசம்
கன்னி : பொறுமை, நிதானம்
துலாம் : தெளிவு, அமைதி
விருச்சிகம் : நன்மை, அதிர்ஷ்டம்
தனுசு : விருத்தி, செல்வாக்கு
மகரம் : களிப்பு, மகிழ்ச்சி
கும்பம் : அன்பு, ஆதரவு
மீனம் : உயர்வு, மேன்மை
இன்று இசைஞானியார் குருபூஜை தினம். தினம் சோழவள நாட்டில் திருவாரூருக்கு அண்மையில் உள்ள கமலாபுரத்தில் ஆதிசைவர் மரபில் திருவவதாரம் செய்து சடையனாரை மணந்து திருநாவலூரரை (சுந்தரமூர்த்தி நாயனாரை) ஈன்று இவ்வுலகுக்களித்து ஈன்ற பொழுதில் பெரிதுவந்த நற்றாய். சைவம் வளரப் பணியாற்றிச் சிவனடி சேர்ந்தவர். முக்தி பெற்ற தினம் சித்திரை மாதம் சித்திர நட்சத்திரம்
(“எனக்கு மரணத்தில் வேதனை இல்லை. வாழ்வில் தான் வேதனை இருக்கிறது. ஆனாலும் நான் வாழத்தான் விரும்புகிறேன்” –ஜாக் பெண்டன்)
சனி, புதன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள் : 1, 5
பொருந்தா எண்கள் : 8, 7
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், பச்சை
இராமரத்தினம் ஜோதி
( விஷ்ணு கோயில் தெஹிவளை)