சுக்கில பட்ச ஸப்தமி திதி பின்னிரவு 2. 38 வரை. அதன் மேல் அஷ்டமி திதி. புனர்பூசம் நட்சத்திரம் பகல் 10.44 வரை. பின்னர் பூசம் நட்சத்திரம் சிரார்த்த திதி. வளர்பிறை ஸப்தமி. சித்தயோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் கேட்டை, மூலம். சுபநேரங்கள் காலை 7.30– 8.30 மாலை 4.30– 5.30, ராகு காலம் 3.00 – 4.30, எமகண்டம் 9.00– 10.30, குளிகை காலம் 12.00 1.30, வாரசூலம் –வடக்கு (பரிகாரம்– பால்) கங்கா ஸப்தமி.
மேடம் உண்மை, உயர்வு
இடபம் சுகம், ஆரோக்கியம்
மிதுனம் லாபம், லக் ஷ்மீகரம்
கடகம் அன்பு, பாசம்
சிம்மம் இன்சொல், வரவேற்பு
கன்னி வரவு, இலாபம்
துலாம் தடை, இடையூறு
விருச்சிகம் பகை, விரோதம்
தனுசு ஆசை, நஷ்டம்
மகரம் சுபம், மங்களம்
கும்பம் வாழ்வு, வளம்
மீனம் புகழ், சாதனை
இன்று புனர்பூசம் நட்சத்திரம். ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தி அவதரித்தது இந்நட்சத்திரத்தில். ஒரே பாணம், ஒரே வாக்கு, ஒரே தாரம் என்று வாழ்ந்து காட்டிய புருஷோத்தமன். மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்ட இறைவன் மனிதனாகப் பிறந்த அவதார புருஷன். இன்று ஸ்ரீ இராமரை வழிபடல் நன்று
(“முழுமையான வெற்றி என்பது ஒரே சமயத்தில் கிடைத்துவிடுவதல்ல. மாறாக தவணைகளில் கிடைப்பது” –ஸ்டிரெட் டெர்னல்)
சந்திரன், சனி கிரகங்களின் ஆதிக்க நாளின்று
அதிர்ஷ்ட எண்கள்: 7, 1, 5, 6
பொருந்தா எண்கள்: 9, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை, மஞ்சள்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)