கிருஷ்ணபட்ச நவமி திதி பின்னிரவு 1.17 வரை. பின்னர் தசமி திதி. திருவோனம் நட்சத்திரம் பின்னிரவு 10.02 வரை. பின்னர் அவிட்டம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை நவமி. சித்த யோகம் மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் திருவாதிரை புனர்பூசம். சுபநேரங்கள்: பகல் 10.30 – 11.30, மாலை 6.30 – 7.30, ராகுகாலம் 1.30 – 3.00, எமகண்டம் 6.00 – 7.30, குளிகை காலம் 9.00 – 10.30, வாரசூலம் – தெற்கு (பரிகாரம் – தைலம்) சிரவண விரதம். காலை நடராஜர் அபிஷேகம்.
மேடம் : பகை, பயம்
இடபம் : தெளிவு, அமைதி
மிதுனம் : சிக்கல், சங்கடம்
கடகம் : அன்பு, ஆதரவு
சிம்மம் : தோல்வி, கவலை
கன்னி : நோய், அசதி
துலாம் : லாபம், ல ஷ்மீகரம்
விருச்சிகம் : செலவு, சங்கடம்
தனுசு : சுகம், ஆரோக்கியம்
மகரம் : வரவு, லாபம்
கும்பம் : வெற்றி, அதிர்ஷ்டம்
மீனம் : நன்மை, யோகம்
ஸ்ரீ இராமானுஜர் ஆயிரம் ஆண்டு (1017– 2017) மும்மூர்த்திகளும் கோஷ்டியாக ஆலோசனை நடத்தியதால் திருக்கோஷ்டியூர் என பெயர் பெற்ற ஸ்தலத்தில் தன் ஆச்சாரியாரை சேவிக்க சென்ற இராமானுஜர் கீதையின் சொற்களை தன் ஆச்சாரியரான மனக்காய் நம்பிகளிடம் கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டார். “கீதையின் சொற்களே இவ்வளவு அமுதமயமாக உள்ளதே. அப்படியானால் அதை உரைத்த அந்த துவாரகைக் கண்ணன் தான் எப்படி இருப்பான்? கீதையைக் காட்டினீரே அதன் பொருளான கண்ணனை காட்டுவீரா என்றார். (தொடரும்.)
சந்திரன், கேது கிரகங்களின் ஆதிக்க நாளான இன்று
அதிர்ஷ்ட எண்கள் : 7, 6
பொருந்தா எண்கள் : 9, 8, 3
அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை கலந்த நிறங்கள்
இராமரத்தினம் ஜோதி
(ஸ்ரீ விஷ்ணு கோயில் தெஹிவளை)