கிருஷ்ணபட்ச அஷ்டமி திதி காலை 9.09 வரை. அதன் மேல் நவமி திதி. மூலம் நட்சத்திரம் பகல் 10.29 வரை. பின்னர் பூராடம் நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்பிறை நவமி. அமிர்தசித்தயோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் ரோகிணி, மிருகசீரிடம் உருத்திர சாவர்ணி மன்வாதி. சுபநேரங்கள் பகல் 10.30 – 11.30, மாலை 4.30– 5.30, ராகுகாலம் 3.00 – 4.30, எமகண்டம் 9.00 – 10.30, குளிகை காலம் 12.00 – 1.30, வாரசூலம் – வடக்கு (பரிகாரம்– பால்).
மேடம் : அமைதி, சாந்தம்
இடபம் : உயர்வு, மேன்மை
மிதுனம் : கோபம், அவமானம்
கடகம் : நம்பிக்கை, யோகம்
சிம்மம் : புகழ், பாராட்டு
கன்னி : விவேகம், வெற்றி
துலாம் : தோல்வி, கவலை
விருச்சிகம் : சிந்தனை, தெளிவு
தனுசு :ஆதாயம், லாபம்
மகரம் :காரியசித்தி, அனுகூலம்
கும்பம் : புகழ், பெருமை
மீனம் : பிரிவு, கவலை
(ஸ்ரீ இராமானுஜர் ஆயிரம் ஆண்டு) காஞ்சி வரதராஜர் கட்டளைப்படி பெரிய நம்பிகளை ஆச்சாரியராக கொள்வதற்காக இராமானுஜர் ஸ்ரீரங்கம் செல்ல பெரிய நம்பிகளும் அவரைத்தேடி காஞ்சிபுரம் வந்தார். வழியில் மதுராந்தகம் ஏரிகாத்த இராமர் சந்நிதியில் இருவரும் சந்தித்தனர். தனக்கு உடனடியாக பஞ்ச சமஸ்காரம் செய்தருளும்படி பெரியநம்பிகளிடம் வேண்டினார் இராமானுஜர். நம்ஆழ்வாரின் அம்சமான மகிழமரத்தடியில் பெரியபெருமானின் சங்கு, சக்கரம் ஆகியவற்றை உடலில் இருக்க இராமானுஜருக்கு தாப சமஸ்காரம் செய்வித்தார். அவருக்கு சமஸ்காரம் செய்யப்பட்ட சங்கு மற்றும் சக்கர முத்திரைகள் இன்னும் மதுராந்தகம் ஏரிகாத்த இராமர் சந்நிதியில் உள்ளன. “ஸ்ரீ இராமானுஜாய நமஹா”
(“நீங்கள் ஒரு பொருளை மதிக்கத் தெரிந்தால் அதுவும் உங்களை மதிக்கும்” –சாரதா தேவியார்.)
குரு, கேது கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.
அதிர்ஷ்ட எண்கள் : 1, 5
பொருந்தா எண்கள் : 6, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள் :மஞ்சள், இளஞ்சிவப்பு
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)