20.03.2017 துர்முகி வருடம் பங்குனி மாதம் 7 ஆம் நாள் திங்கட்கிழமை. கிருஷ்ணபட்ச ஸப்தமி திதி காலை 7.22 வரை. அதன் மேல் அஷ்டமி திதி. கேட்டை நட்சத்திரம் காலை 8.11 வரை. பின்னர் மூலம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை. அஷ்டமி சித்தயோகம். சமநோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரம் ரோகினி, சுபநேரங்கள் காலை 9.30 – 10.30, மாலை 3.30 – 4.30, ராகு காலம் 7.30 – 9.00, எமகண்டம் 10.30 – 12.00, குளிகை காலம் 1.30 – 3.00, வாரசூலம் – கிழக்கு (பரிகாரம் – தயிர்)
மேடம் : மகிழ்ச்சி, சந்தோஷம்
இடபம் : நற்செயல், பாராட்டு
மிதுனம் : சுகம், ஆரோக்கியம்
கடகம் : சாதனை, புகழ்
சிம்மம் : தனம், சம்பத்து
கன்னி : வெற்றி, யோகம்
துலாம் : வரவு, லாபம்
விருச்சிகம் : தோல்வி, கவலை
தனுசு : மறதி, விரயம்
மகரம் : தடை, கவலை
கும்பம் : ஆதாயம், இலாபம்
மீனம் : புகழ், பெருமை
ஸ்ரீ இராமானுஜர் ஆயிரம் ஆண்டு 2017 நம்மாழ்வாரிடம் மதுரகவியாழ்வார் நித்ய பூஜைக்கு அவருடைய அர்ச்சாவிக்கிரகம் வேண்ட தாமிரபரணி ஆற்றை சுண்ட காய்ச்ச விக்கிரகம் கிடைக்கும் என அருளினார். அவ்வாறு செய்ய திருதண்டம் காஷாய சடைகளுடன் ஒரு விக்கிரகம் வெளிவர நம்மாழ்வார் அது எனக்கு பின்னர் 300 ஆண்டுகள் கழித்து உதித்து வைஷ்ணவத்தை நிலை நிறுத்தப் போகிற இராமானுஜர் என்று அருளினார். கி.பி. 1017 இல் பிறக்கப் போவதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பே விக்கிரக வடிவில் வந்தவர் இராமானுஜர். அந்த விக்கிரகத்தைப் பெற்ற நாகமுனிகள் அதனை ஆழ்வார் திருநகரில் பிரதிஷ்டை செய்தனர். இங்கு மட்டுமே ஸ்ரீ இராமானுஜருக்கு வெள்ளை ஆடை சாத்தப்படுகின்றது. தொடர துவாரகை கண்ணன் திருவடிகளே சரணம்.
நாளை முதல் எம் பெருமானாரின் சாற்று முறை பாசுரங்கள் வெளிவரும்.
சந்திரன், சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள் : 7, 6
பொருந்தா எண்கள் : 9, 8, 3
அதிர்ஷ்ட வர்ணங்கள் : பச்சை கலந்த நிறங்கள்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)