கிருஷ்ணபட்ச சஷ்டி திதி பின்னிரவு 5.23 வரை. அதன்மேல் ஸப்தமி திதி. அனுஷம் நட்சத்திரம் பின்னிரவு 5.42 வரை. பின்னர் கேட்டை நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை சஷ்டி. சித்தயோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் பரணி. சுபநேரங்கள் பகல் 10.30 – 11.30இ மாலை 4.30– 5.30, ராகு காலம் 09.00– 10.30, எமகண்டம் 1.30– 3.00, குளிகை காலம் 6.00– 7.30. வார சூலம் – கிழக்கு. (பரிகாரம் –தயிர்). சனி பகவான் சிறப்பு ஆராதனை. கருட தரிசனம், விஷ்ணுவாலய தரிசனம் நன்று. கிருஷ்ணபட்ச சஷ்டி விரதம்.
மேஷம் : அன்பு, பாசம்
ரிஷபம் : வாழ்வு, வளம்
மிதுனம் : செலவு, விரயம்
கடகம் : நற்செயல், பாராட்டு
சிம்மம் : பொறுமை, நிதானம்
கன்னி : அமைதி, தெளிவு
துலாம் : அன்பு, இரக்கம்
விருச்சிகம் : சிக்கல், சங்கடம்
தனுசு : ஆதரவு, இரக்கம்
மகரம் : தோல்வி, கவலை
கும்பம் : சாந்தம், அமைதி
மீனம் : முயற்சி, முன்னேற்றம்
ஸ்ரீராமானுஜர் ஆயிரம் ஆண்டுகள் (1017– 2017) கி.பி. 1097– 1110 திருநாராயணபுரம் வாழ்க்கை. கி.பி. 1111– 1112 திருவரங்கம் திரும்பியது. கி.பி.1137 பூலோக வாழ்வு துறத்தல். இவரின் பன்னிரு திருநாமங்கள், இளையாழ்வார், ராமானுஜர், பரதபுரீசர் பெரியதிருமலை நம்பியால் வழங்கப்பட்டவை. எதிராஜர், கச்சிப்பேரருளாளரால் வழங்கப்பட்டது. உடையவர், திருவரங்கத்து நம்பெருமாள் வழங்கியது.
தேசிகேந்திரன், திருமலை வேங்கடவனால் வழங்கப்பட்டது. ஸ்ரீபாஷ்யகாரர் ஸாரதா பீட சரஸ்வதியால் வழங்கப்பட்டது. திருப்பாவை ஜீவர், பெரியநம்பியால் வழங்கப்பட்டது. எம்பெருமானார், திருக்கோஷ்டியூர் நம்பிகளால் வழங்கப்பட்டது. நம் கோயில் அண்ணன், ஸ்ரீ ஆண்டாள் வழங்கியது. சடகோபன், திருமாலையாண்டான் வழங்கியது. இலட்சுமணமுனி, திருவரங்கப்பெருமானரையர் வழங்கியது. தொடர்ந்து எழுத கோகுல கண்ணன் துணை.
செவ்வாய், ராகு கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று,
அதிர்ஷ்ட எண்கள் : 5 –6
பொருந்தா எண்கள் : 2 – 8
அதிர்ஷ்ட வர்ணங்கள் : லேசான சிவப்பு, நீலம், மஞ்சள்