கிருஷ்ணபட்ச பஞ்சமி திதி பின்னிரவு 3.18 வரை. அதன் மேல் சஷ்டி. விசாகம் நட்சத்திரம் பின்னிரவு 3.07 வரை. பின்னர் அனுஷம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை பஞ்சமி. சித்தயோகம். கீழ் நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் அஸ்வினி. சுபநேரங்கள் காலை 9.30– 10.30, மாலை 4.30 – 5.30, ராகு காலம் 10.30 – 12.00, எமகண்டம் 3.00 – 4.30, குளிகை காலம் 7.30– 9.00, வாரசூலம் – மேற்கு (பரிகாரம் – வெல்லம்)
மேடம்: முயற்சி, முன்னேற்றம்
இடபம்: இன்பம், மகிழ்ச்சி
மிதுனம்: புகழ், பெருமை
கடகம்: செலவு, விரயம்
சிம்மம்: சுகம், இன்பம்
கன்னி: வெற்றி, யோகம்
துலாம்: உறுதி, நம்பிக்கை
விருச்சிகம்: ஈகை, புண்ணியம்
தனுசு: தனம், சம்பத்து
மகரம்: குழப்பம், சஞ்சலம்
கும்பம்: அமைதி, சாந்தம்
மீனம்: அன்பு, பாசம்
ஸ்ரீ இராமானுஜர் ஆயிரம் ஆண்டுகள் (1017 – 2017) உபயனம் கி.ப. 1025, திருமணம் கி.பி. 1033, தந்தையார் மறைவு கி.பி. 1033, கல்வி கற்றது தந்தையிடம் 15 வயது வரை. அத்யயனம் பின்பு திருப்புட் குழியில் யாதவ பிரகாசரிடம் ஆளவந்தாரை தரிசித்து கி.பி. 1041. திருமலை திருப்பதியில் சங்கு சக்கரம் நிரூபணம் செய்தது. கி.பி.1050 – 1090 திருவரங்கம் நிர்வாகப் பணிகள் சீர்திருத்தம். கி.பி.1047 30 ஆவது வயதில் சிரேஷ்ட வைஷ்ணவரான திருக்கச்சி நம்பியை விருந்தோம்பலில் அவமதித்த தன் மனைவியான தஞ்சமாம்பாளை பிரிந்து சந்நியாசியாக துறவறம் பூண்டது. இவர் ஆறு கட்டளைகளில் ஒன்று நாலாயிரம் திவ்ய பிரபந்தங்களை "பொருள் உணர்ந்து நீ படித்து அதன் பொருளை விளக்கிக் காட்டு என்பதாகும்” தொடர்ந்து எழுதுவதற்கு கோகுலத்து கண்ணன் திருவடிகள் துணை.
சனி, குரு கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள் :1, 5
பொருந்தா எண்கள்: 8, 6
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இளஞ்சிவப்பு
இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)