16.03.2017 துர்முகி வருடம் பங்குனி மாதம் 3 ஆம் நாள் வியாழக்கிழமை.
கிருஷ்ணபட்ச சதுர்த்தி திதி பின்னிரவு 1.20 வரை. அதன் மேல் பஞ்சமி திதி சுவாதி நட்சத்திரம். பின்னிரவு 12.40 வரை. பின்னர் விசாகம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை, சதுர்த்தி அமிர்த சித்தயோகம் சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் உத்திரட்டாதி ,ரேவதி சுபநேரங்கள் பகல் 10.30– 11.30, ராகு காலம் 1.30– 3.00, எமகண்டம் 6.00 – 7.30, குளிகை காலம் 9.00– 10.30, வாரசூலம் – தெற்கு (பரிகாரம் – தைலம்) கிருஷ்ணபட்ஷ சங்கடஹர சதுர்த்தி விரதம் சுபமுகூர்த்த நாள் காரைக்கால் அம்மையார் குரு பூஜை தினம்.
மேடம் : புகழ், செல்வாக்கு
இடபம் : பக்தி, ஆசி
மிதுனம்: செலவு, விரயம்
கடகம் : காரியசித்தி, அனுகூலம்
சிம்மம் : புகழ், சாதனை
கன்னி : தனம், சம்பத்து
துலாம் : அமைதி, தெளிவு
விருச்சிகம் : ஊக்கம், உயர்வு
தனுசு : மறதி, விரயம்
மகரம் : நோய், அசதி
கும்பம் : லாபம், லக் ஷ்மீகரம்
மீனம் : நற்செயல், பாராட்டு
ஸ்ரீ இராமானுஜர் ஆயிரம் வருடங்கள் "கிருத யுகத்தில் ஆதி சேடனாகவும் திரேதாயுகத்தில் இலக்குமணனாகவும் துவாபர யுகத்தில் பலராமனாகவும் அவதரித்த ஆதி சேடனே இக் கலியுகத்தில் எம் பெருமானார் இராமானுஜராக அவதாரமெடுத்தார். அவதாரம் பிங்கல வருடம் சித்திரை மாதம் சுக்கில பட்ச பஞ்சமி திதி. திருவாதிரை நட்சத்திரம். கி.பி. 1017 ஆம் ஆண்டு அவதரித்த ஊர் ஸ்ரீ பெரும்புதூர். தந்தை பெயர் ஆசூரி கேசவ சோமையாஜி பட்டர். தாயார் காந்திமதி அம்மையார். இயற்பெயர் இளையாழ்வார். பூலோக வாழ்க்கை 1017– 1137. திருமணம் 10.33. மனைவி தஞ்சமாம்பாள் எம் பெருமானின் நவநிதியங்களான நூல்கள் வேதாந்த சங்கிரகம், வேதாந்த தீபம், வேதாந்த சாரம், ஸ்ரீ பாஷ்யம், கீதா பாஷ்யம், சரணாகதி கத்யம், ஸ்ரீ ரங்க கத்யம், ஸ்ரீ வைகுண்ட கத்யம், நித்யம் முதலியன” ஸ்ரீ இராமானுஜர் திருவடிகளே சரணம். தொடரும். கோகுலத்து வாசன் கண்ணன் திருவடிகளே சரணம்.
சுக்கிரன், சந்திரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள் :1, 5
பொருந்தா எண்கள்: 7, 2
அதிர்ஷ்ட வர்ணங்கள்: வெளிர் நீலம், மஞ்சள்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)