சுபயோகம்
14.03.2017 துர்முகி வருடம் உத்தராயணம் சிசிர ருது பங்குனி மீன மாதம் 1 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை.
கிருஷ்ணபட்ச துவிதியை திதி முன்னிரவு 10.12 வரை. அதன் மேல் திரிதியை திதி. அஸ்தம் நட்சத்திரம் முன்னிரவு 8.31 வரை. பின்னர் சித்திரை நட்சத்திரம். சிரார்த்த திதி சூன்யம். சித்தயோகம் சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் சதயம், பூரட்டாதி சுபநேரங்கள் பகல் 10.30 – 11.30, மாலை 4.30 – 5.30, ராகு காலம் 3.00 – 4.30, எமகண்டம் 9.00 – 10.30, குளிகை காலம் 12.00 – 1.30, வார சூலம் – வடக்கு (பரிகாரம் – பால்) ஷடசீதி புண்யகாலம் காரடலான் நோன்பு காமாட்சி அம்மனை வழிடல் நன்று.
மேடம் : வெற்றி, யோகம்
இடபம் : தனம், சம்பத்து
மிதுனம் : உயர்வு, மேன்மை
கடகம் : நலம், ஆரோக்கியம்
சிம்மம் : ஓய்வு, அசதி
கன்னி : நன்மை, அதிர்ஷ்டம்
துலாம் : கவனம், எச்சரிக்கை
விருச்சிகம் : இன்பம், மகிழ்ச்சி
தனுசு : மறதி, விரயம்
மகரம் : போட்டி, செல்வாக்கு
கும்பம் : நிறைவு, பூர்த்தி
மீனம் : அமைதி, சாந்தம்
ஸ்ரீ இராமானுஜர் ஆயிரம் ஆண்டு தொன்மை வாய்ந்த நம் இந்து தர்மத்தை சார்ந்த மக்களிடையே மதப்பற்று தளர்வுறும் போதும், சமய அறிவு மங்கும் போதும் வாழ்க்கை நெறி பிறழும் போதும் பல மகான்கள் இவ்வுலகில் தோன்றி நம் மதத்தின் உண்மைத் தத்துவங்களை உலகிற்கு உணர்த்தி நம்மை விழிப்பு நிலைக்கு கொண்டு வந்தது காலம் காலமாக நடந்து வரும் உண்மையாகும். உலகளவில் நம் மதத்தில் தோன்றிய பரமாச்சாரியார்கள் என்று போற்றப்படுபவர்களில் சைவ சமயத்திற்கு ஆதிசங்கரரும் ஸ்ரீ வைஷ்ணவ சமயத்திற்கு இராமானுஜரும் சிறப்பானவர்கள். இளையாழ்வார், இராமானுஜ முனி யதிராஜா, உடையவர், எம் பெருமானார், பரமாச்சாரியார், பாஷ்யகாரர் போன்ற திருநாமங்களால் போற்றிப் புகழப்பட்டு 120 ஆண்டுகள் வரை வாழ்ந்து பெரும் சாதனை படைத்தவர் இராமானுஜர் ஆவார். – தொடரும்.
புதன், செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
பொருந்தா எண்கள்: 2, 8, 1
அதிர்ஷ்ட வர்ணங்கள்: சாம்பல், சிகப்பு, நீலம்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)