கிருஷ்ணபட்ச துவிதியை திதி மாலை 3.44 வரை. அதன்மேல் திருதியை திதி. ஆயில்ய நட்சத்திரம் பின்னிரவு 2.05 வரை. பின்னர் மகம் நட்சத்திரம். சிரார்த்த திதி சூன்யம். மரண யோகம். கீழ்நோக்குநாள். கரிநாள். சுபநேரங்கள் காலை 7.30 – 8.30, மாலை 4.30 – 5.30, ராகு காலம் 09.00– 10.30, எமகண்டம் 1.30– 3.00, குளிகை காலம் 6.00– 07.30 வார சூலம் –கிழக்கு. (பரிகாரம் –தயிர்) சபரிமலையில் மகர ஜோதிதரிசனம். இன்று கருட தரிசனம் நன்று. தைப்பொங்கல் பண்டிகை.
மேஷம்: லாபம்,லக்ஷ்மீகரம்
ரிஷபம்: நலம், ஆரோக்கியம்
மிதுனம்: சுகம், ஆரோக்கியம்
கடகம்: உதவி, நட்பு
சிம்மம்: வெற்றி, அதிர்ஷ்டம்
கன்னி: போட்டி, ஜெயம்
துலாம்: நற்செயல், பாராட்டு
விருச்சிகம்: புகழ், பாராட்டு
தனுசு: பொறுமை, செல்வாக்கு
மகரம்: இன்சொல், வரவேற்பு
கும்பம்: நன்மை, யோகம்
மீனம்: அன்பு , பாசம்
மகர ரவி பகல் 11.00 தைமாதப்பிறப்பு (பொங்கல் வைக்க சிறந்த நேரம்) உத்தராயண புண்யகாலம். மகர சங்கிராந்தி. சூரியனை வழிபடல் நன்று. இறைவன் எழுந்தருளியிருக்கும் பரமபதத்தின் வாயில் திறக்கும் நன்னாள். எல்லோருக்கும் இவ்வருடம் முழுவதும் இன்பமாய் அமைய வேண்டி துவாரகா வாசனான கண்ணனை பிரார்த்திக்கிறேன்.
("தீபம் அதன் அடிப்புறத்தில் ஒளி தருவதில்லை" –துருக்கிய பழமொழி)
கேது, புதன் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.
அதிர்ஷ்ட எண்கள்: 2,1 ,5
பொருந்தா எண்கள்: 8,7
அதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம், வெளிரான மஞ்சள்
ராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)