சுக்கிலபட்ச திரிதியை திதி முன்னிரவு 10.54 வரை. அதன்மேல் சதுர்த்தி திதி. பூராடம் நட்சத்திரம். நாள் முழுவதும் சிரார்த்த திதி வளர்பிறை திரிதியை சித்தயோகம் கரிநாள் (சுபம் விலக்குக) கீழ் நோக்கு நாள். சந்திராஷ்ட நட்சத்திரம் திருவாதிரை. சுபநேரங்கள்: காலை 9.15 – 10.15, மாலை 4.45 – 5.45, ராகுகாலம் 10.30– 12.00, எமகண்டம் 3.00– 4.30, குளிகை காலம் 7.30 – 9.00. வாரசூலம் – மேற்கு. (பரிகாரம் – வெல்லம்) சிறப்புலியர் நாயனார் குருபூஜைத்தினம்.
மேடம்: தோல்வி, கவலை
இடபம்: தனம், வரவு
மிதுனம்: சுபம், மங்களம்
கடகம்: இன்பம், மகிழ்ச்சி
சிம்மம்: அமைதி, சாந்தம்
கன்னி: புகழ், பாராட்டு
துலாம்: பணம், பரிசு
விருச்சிகம்: தனம், சம்பத்து
தனுசு: கவனம், எச்சரிக்கை
மகரம்: பகை, விரோதம்
கும்பம்: வரவு, லாபம்
மீனம்: ஈகை, புண்ணியம்.
பேயாழ்வார் அருளிய மூன்றாந் திருவந்தாதி “நாமம் பல சொல்லி நாராயணா வென்று தன் துழாய் கண்ணனையே காண்க நம்கண்” பொருளுரை: நல்ல நெஞ்சமே நாராயணன் திருநாமாங்களை சொல்லி சேவிப்போம். துளசி மாலையை தரித்து துவாரகா கண்ண பிரானை நாம் தரிசிக்க வேண்டும். (ஆழ்வார் திருவடிகளே சரணம்!)
("நம் எண்ணங்களுக்கு ஏற்ப வசதிகளை பெருக்குவதை விட நம் வசதிகளுக்கு ஏற்றபடி எண்ணங்களை குறைக்க முயல்வது நன்று”. – அரிஸ்டாட்டில்)
சந்திரன், புதன் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று,
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7
பொருந்தா எண்: 9, 8, 6
அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை, இலேசான மஞ்சள்.
இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)