16.11.2016 துர்முகி வருடம் கார்த்திகை மாதம் 01ஆம் நாள் புதன்கிழமை.
கிருஷ்ணபட்ச துவிதியை திதி மாலை 3.33 வரை. அதன்மேல் திருதியை திதி. ரோஹிணி நட்சத்திரம் பிற்பகல் 2.19 வரை. பின்னர் மிருகசிரீஷம் நட்சத்திரம். சிரார்த்த திதி சூன்யம். சித்த யோகம். கரிநாள். சுபம் விலக்குக. மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் விசாகம், அனுஷம். சுபநேரங்கள் காலை 9.15 – 10.15, மாலை 4.45 – 5.45, ராகு காலம் 12.00– 1.30, எமகண்டம் 7.30– 9.00, குளிகை காலம் 10.30– 12.00. வார சூலம் –வடக்கு. (பரிகாரம் –பால்) சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் பக்தர்கள் மாலையணியும் விழா. கார்த்திகை மாதப்பிறப்பு முடவன் முழுக்கு. விஷ்ணுபதி புண்யகாலம்.
மேஷம் : வரவு,லாபம்
ரிஷபம் : நன்மை, யோகம்
மிதுனம் : அமைதி,சாந்தம்
கடகம் : குழப்பம்,சஞ்சலம்
சிம்மம் : சுகம், ஆரோக்கியம்
கன்னி : கோபம், சினம்
துலாம் : வெற்றி, அதிர்ஷ்டம்
விருச்சிகம் : லாபம் , லக்ஷ்மீகரம்
தனுசு : காரியசித்தி,அனுகூலம்
மகரம் : பொறுமை, அமைதி
கும்பம் : ஜெயம்,புகழ்
மீனம் : தேர்ச்சி,அனுகூலம்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழி பாசுரம்; தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார் வள்ளல் மாலிருஞ்சோலை மணாளனார். பள்ளி கொள்ளுமிடத்து அடி கொட்டிடக் கொள்ளுமாகில் நீ கூடிடு கூடலே. பொருளுரை – தெளிந்த சிந்தை உடைய ஞானியர் கைதொழும் வாசுதேவனே! திருமாலிருஞ் சோலையில் எழுந்தருளியுள்ள வள்ளல். அழகிய மணவாளனாய் சயனம் கொண்டவனே. நீ நின்ற இடத்தில் உனது திருவடிகளைப் பிடிக்கும் பாக்கியத்தை நீ தருகையில் கூடவே நீ கூடுவாயாக.(ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்)
("வணங்க ஆரம்பிக்கும் போதே மனிதன் வளர ஆரம்பிக்கின்றான்" – சோல்ரிட்ஜ்)
கேது, செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.
அதிர்ஷ்ட எண்கள் : 5 –6
பொருந்தா எண்கள் : 7– 8 – 2
அதிர்ஷ்ட வர்ணங்கள் : நீலம், மஞ்சள்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)