கிருஷ்ணபட்ச நவமி திதி மாலை 5.39 வரை. அதன் மேல் தசமி திதி ஆயிலியம் நட்சத்திரம் பின்னிரவு 2.37 வரை. பின்னர் மகம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை நவமி. சித்தயோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் உத்திராடம். சுபநேரங்கள் காலை 9.15 – 10.15, மாலை 5.00 – 6.00, ராகு காலம் 7.30 – 9.00, எமகண்டம் 10.30 – 12.00, குளிகை காலம் 1.30 – 3.00, வாரசூலம் – கிழக்கு (பரிகாரம் – தயிர்)
மேடம் :காரியசித்தி, அனுகூலம்
இடபம் : மறதி, விரயம்
மிதுனம் : அன்பு, ஆசை
கடகம் : அமைதி, நிம்மதி
சிம்மம் : வெற்றி, அதிர்ஷ்டம்
கன்னி : தோல்வி, கவலை
துலாம் : அமைதி, தெளிவு
விருச்சிகம் : சுகம், ஆரோக்கியம்
தனுசு : பிணி, பீடை
மகரம் : நலம், ஆரோக்கியம்
கும்பம் : முயற்சி, முன்னேற்றம்
மீனம் : லாபம், லக் ஷ்மீகரம்
பேயாழ்வார் அருளிய மூன்றாம் திருவந்தாதி பாசுரம். முதலாழ்வார்களில் இருவர் விளக்கேற்ற, ஏற்றிய விளக்கில் எம்பெருமானை முதலில் தரிசித்தவர் பேயாழ்வார் பாடுகின்றார். “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும் அருக்கண் அணி நிறமும் கண்டேன். இன்று எம்பெருமானின் கடல் நிறம் கொண்ட மேனியில் முதலில் மார்பில் உள்ள திருமகளைக் கண்டேன். அதன் பின்பு தான் அவன் அழகிய திருமேனியைக் கண்டேன். பிரகாசமான திருமேனியைக் கண்டேன். அழகிய சுதர்ஸனத்தையும் கையில் வலம்புரி சங்கையும் கண்டேன்.புளகித்தேன்”.
(பேயாழ்வார் திருவடிகளே சரணம்.)
“குணமுள்ள பெண் ஒருவன் கருத்தில் ஒளி வீசுகிறாள். புத்திசாலி பெண் ஒருவன் கவனத்தை கவர்கிறாள். அழகான பெண் ஒருவனின் கலையுணர்வை மயக்குகிறாள். ஆனால் பரிவும் பாசமும் உள்ள பெண் அவனையே ஆட்கொள்கிறாள்." – அரிஸ்டோட்டில்.
சுக்கிரன், கேது கிரகங்களின் ஆதிக்கம் கொண்ட நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 2
பொருந்தா எண்கள்: 3, 7, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: அடர்பச்சை, நீலம்.
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)