02.01.2016 மன்மத வருடம் மார்கழி மாதம் 17ஆம் நாள் சனிக்கிழமை.
கிருஷ்ணபட்ச அஷ்டமி திதி பின்னிரவு 12.51 அதன் மேல் நவமி திதி அஸ்தம் நட்சத்திரம் பின்னிரவு 12.24 வரை. பின்னர் சித்திரை நட்சத்திரம் சிரார்த்த திதி தேய்பிறை அஷ்டமி மரண யோகம் சமநோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரம் புரட்டாதி. சுபநேரங்கள் காலை 7.45 – 8.45 பகல் 10.45 – 11.45. மாலை 4.45 – 5.45. ராகுகாலம் 9.00 – 10.30. எமகண்டம் 1.30 – 3.00 குளிகை காலம் 6.00 – 7.30. வாரசூலம் கிழக்கு (பரிகாரம் – தயிர்)
மேடம் : திறமை, முன்னேற்றம்
இடபம் : கவலை, நஷ்டம்
மிதுனம் : அசதி, வருத்தம்
கடகம் : புகழ், பாராட்டு
சிம்மம் : நோய், ஓய்வு
கன்னி : மேன்மை, செல்வாக்கு
துலாம் : முன்னேற்றம், திறமை
விருச்சிகம் : விரயம், செலவு
தனுசு : புண்ணியம், ஈகை
மகரம் : அன்பு, இரக்கம்
கும்பம் : அதிர்ஷ்டம், யோகம்
மீனம் : சிரத்தை, முயற்சி
தெஹிவளை ஸ்ரீவிஷ்ணுவாலயத்தில் மார்கழி உற்சவம் – திருப்பள்ளியெழுச்சி திருப்பாவை 17ஆம் பாசுரம் “அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும் எம்பெருமான் நந்த கோபாலா எழுந்திராய் – உரை– அன்னதானம். வஸ்திரதானம் தண்ணீர்தானம் எல்லாம் செய்கின்ற எங்கள் தலைவனாகிய நந்தகோபனே” எழுந்திருப்பாயாக. கொம்பில் படரும் கொடி போன்ற இளம் மங்கையருக்கெல்லாம் கொழுந்தாயிருக்கும் குலவிளக்கான யசோதா. எங்கள் தலைவியே! எழுந்திரு. ஆகாயத்தில் ஊடே அறுத்துக் கொண்டு ஓங்கி உலகளந்த தேவர்களின் தலைவனான கண்ணா! உறக்கத்தை விட்டு எழுந்திரு. பொன்னால் ஆன வீரக்கழலை அணிந்த சிவந்த பாதங்களை உடைய செல்வா! பலராமா! உன் தம்பியும், நீயும் தூங்கியது போதும் எழுந்திரு (ஆண்டார் திருவடிகளே சரணம்)
சந்திரன் குரு கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5
பொருந்தா எண்கள்: 9, 6, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இளஞ்சிகப்பு