சுக்கிலபட்ச திரிதியை திதி மாலை 6.38 வரை. பின்னர் சதுர்த்தி திதி. அஸ்தம் நட்சத்திரம் காலை 5.29 வரை. அதன்மேல் சித்திரை நட்சத்திரம் சிரார்த்த திதி வளர்பிறை திருதியை திதி. அமிர்த சித்தயோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் சதயம், பூரட்டாதி. சுபநேரங்கள் காலை 10.45 – 11.45. மாலை 3.15 – 4.15, ராகு காலம் 4.30 – 6.00, எமகண்டம் 12.00 – 1.30, குளிகை காலம் 3.00 – 4.30, வாரசூலம் – மேற்கு (பரிகாரம் வெல்லம்) சுப முகூர்த்த நாள். தாபஸ மன்வாதி – ஸாம வேத உபாகருமம் தெஹிவளை ஸ்ரீவெங்கடேஸ்வர மகாவிஷ்ணு மூர்த்தி தேவஸ்தானத்தில் ஆவணி ஞாயிறு உற்சவம் அன்னதானம்.
மேடம் : அசதி, வருத்தம்
இடபம் : நன்மை, அதிர்ஷ்டம்
மிதுனம் : சிரமம், தடை
கடகம் : புகழ், செல்வாக்கு
சிம்மம் : தனம், சம்பத்து
கன்னி : பக்தி, ஆசி
துலாம் : நட்பு, உதவி
விருச்சிகம் : அன்பு, பாசம்
தனுசு : வெற்றி, அதிர்ஷ்டம்
மகரம் : லாபம், லஷ்மீகரம்
கும்பம் : அமைதி, தெளிவு
மீனம் : மகிழ்ச்சி, சந்தோஷம்
நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி முதல் பத்து இரண்டாம் திருவாய் மொழி பாசுரம். “வீகுமின் முற்றவும் வீடு செய்து உம்முயிர் வீடுடை யானிடை வீடுசெய்யுமினே” பொருள்: உலக பொருள்களிடத்துள்ள ஆசை முழுவதையும் விடுங்கள். அவ்வாறு விட்டு உங்கள் உயிர் மோட்சத்தை அடைய இறைவனிடம் சேர்ந்து கொள்ளுங்கள். (ஆழ்வார் திருவடிகளே சரணம்)
(“பிறருக்கு தொண்டு செய்து எவர் உடல் அழிவடைகிறதோ அவர்கள் பாக்கியசாலிகள்”– சுவாமி விவேகானந்தர்)
ராகுவின் பூரண ஆதிக்கம் கொண்ட நாள் இன்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6
பொருந்தா எண்கள்: 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்