அமாவாஸ்யை திதி மாலை 3.12 வரை. அதன் மேல் பிரதமை திதி. மகம் நட்சத்திரம் பகல் 12.19 வரை. பின்னர் பூரம் நட்சத்திரம் சிரார்த்த திதி அமாவாஸ்யை அமிர்த சித்தயோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் உத்திராடம், திருவோணம். சுபநேரங்கள் பகல் 10.45 – 11.45, பிற்பகல் 12. 15 – 1.15 , ராகு காலம் 1.30– 3.00, எமகண்டம் 6.00 – 7.30, குளிகை காலம் 9.00– 10.30, வார சூலம் – தெற்கு. ( பரிகாரம்– தைலம்) ஸர்வ அமாவாஸ்யை விரதம். பிண்ட
பித்ரு. பிதிர்தர்ப்பணம் தர்ப்ப சங்கரஷனம்.
மேடம் :காரியசித்தி, அனுகூலம்
இடபம் : திடம், நம்பிக்கை
மிதுனம் : அசதி, ஓய்வு
கடகம் : கவனம், எச்சரிக்கை
சிம்மம் : நட்பு, உதவி
கன்னி : புகழ், பெருமை
துலாம் : அன்பு, ஆதரவு
விருச்சிகம் : செலவு, விரயம்
தனுசு : அன்பு, பாசம்
மகரம் : புகழ், செல்வாக்கு
கும்பம் : வரவு, லாபம்
மீனம் : விவேகம், வெற்றி
நம்மாழ்வார் அருளிய திருவாய் மொழி. முதல் பத்து – முதல் திருவாய் மொழி பாசுரம். “உயர் வர உயர் நலம் உடையவன் எவன்? அவன் மயர் வறமதி நலம் அருளினன் எவன்? அவன் அயர் வறும் அமரர்கள் அதிபதி எவன்? அவன் துயரறு சுடரடி தொழுது எழுஎன் மனனே. பொருளுரை: என் நெஞ்சமே! எம் பெருமானைக் காட்டிலும் உயர்ந்த கல்யாண குணங்கள் எவரிடமும் கிடையாது. தன்னை சரணடையாதவர்களுக்கும் அருளும் உயர் நலம் கொண்டவன். என் மந்தபுத்தியை அகற்றி சிந்தைக்கு ஞானத்தையும் பக்தியையும் அருளியவன் அவன்தான்.
சூரியனின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று,
அதிர்ஷ்ட எண்கள்: 1 – 5
பொருந்தா எண்: 8
அதிர்ஷ்ட வர்ணம்: மஞ்சள்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)