சுக்கிலபட்ச ஏகாதசி திதி மாலை 4.37 வரை. அதன் மேல் துவாதசி திதி. மூலம் நட்சத்திரம் முன்னிரவு 11.43 வரை. பின்னர் பூராடம் நட்சத்திரம். சிரார்த்த திதி. வளர்பிறை ஏகாதசி அமிர்த கம். கீழ்நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் கார்த்திகை, ரோகினி. சுபநேரங்கள்: காலை 8.15 – 9.00. மாலை 3.15 – 4.15, ராகுகாலம் 4.30 – 6.00 எமகண்டம் 12.30 – 1.30 குளிகை காலம் 3.00 – 4.30. வாரசூலம் – மேற்கு (பரிகாரம் – வெல்லம்) இன்று ஸர்வ சுக்கிலபட்ச ஏகாதசி விரதம். இதற்கு புத்திரதா ஏகாதசி என்று பெயர். உபவாஸமிருந்து ஸ்ரீமான் நாராயணனை வழிபடுவதால் புத்திர சம்பத்து ஏற்படும்.
மேடம் : வரவு, லாபம்
இடபம் : தடை, தாமதம்
மிதுனம் : செலவு , விரயம்
கடகம் : அன்பு, ஆதரவு
சிம்மம் : லாபம் , லஷ்மீகரம்
கன்னி : வெற்றி , ஜெயம்
துலாம் : நோய் , வருத்தம்
விருச்சிகம் : நன்மை, யோகம்
தனுசு : திறமை, ஆர்வம்
மகரம் : போட்டி, ஜெயம்
கும்பம் : அமைதி, தெளிவு
மீனம் : உயர்வு, செல்வாக்கு
பெரியாழ்வார் அருளிய முதற்பத்து இரண்டாம் திருவாய் மொழி கண்ணன் பிறந்தான். பாசுரம்; “ஒருவர் விழுவார் உகந்தாளிப்பர் நாடுவார் நம்பிரான் எங்குத்தான் என்பார். பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று ஆடுவார்களும் ஆயிற்றாய்ப் பாடியே” பொருளுரை: ஆயர்பாடியில் உள்ள யாதவர்கள் தங்கள் தலைவனான நந்த கோபனுக்குப் பிள்ளைப் பிறந்ததைக் கேட்டதும் மகிழ்ச்சியில் தம்மை மறந்து மற்றவர்களுக்குச் சேதி சொல்ல நாலா புறமும் ஓடினர். சிலர் ஓடும் போதே விழுந்தனர். விழும்போது அவர்கள் உடம்பெல்லாம் எண்ணெயும் சுண்ணமும் கலந்த சேறு அப்பிக் கொண்டது.
புதன், ராகு கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள் : 1 – 5 – 9
பொருந்தா எண்கள் : 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள் வெளிர், நீலம்