சுக்கிலபட்ச பஞ்சமி திதி நாள் முழுவதும். உத்தரம் நட்சத்திரம் காலை 8.03 வரை. பின்னர் அஸ்தம் நட்சத்திரம் சிரார்த்த திதி. வளர் பிறை. பஞ்சமி அமிர்தயோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் சதயம். சுபநேரங்கள்: காலை 7.45 – 8.45, மாலை 3.15 – 4.15, ராகுகாலம் 4.30 – 6.00 எமகண்டம் 12.00 – 1.30 குளிகை காலம் 3.00 – 4.30. வாரசூலம் – மேற்கு (பரிகாரம் – வெல்லம்) நாக பஞ்சமி கெருட பஞ்சமி.
மேடம் : லாபம், ஆதாயம்
இடபம் : புகழ், செல்வாக்கு
மிதுனம் : சிக்கல், சங்கடம்
கடகம் : சுகம், ஆரோக்கியம்
சிம்மம் : நன்மை, அதிர்ஷ்டம்
கன்னி : லாபம், லஷ்மீகரம்
துலாம் : முயற்சி, முன்னேற்றம்
விருச்சிகம் : பக்தி, அசதி
தனுசு : அன்பு, பாசம்
மகரம் : தனம், சம்பத்து
கும்பம் :பிரயாணம், அலைச்சல்
மீனம் : லாபம், லஷ்மீகரம்
பெரியாழ்வார் அருளிச் செய்த திருவாய் மொழி முதற்பத்து பாசுரம் 9 “உடுத்துக் களைந்த நின் பீதக ஆடையுடுத்துக் கலந்துண்டு திருவோண திருவிழவில் படுத்த பைந்நாகனைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே. பொருளுரை: எம் பெருமானே! நீ உடுத்த பொன்னாடையை நாங்கள் உடுக்கின்றோம். உன்பிரசாதத்தையே உண்கின்றோம். உனக்கு சாத்திய மலரை நாங்கள் சூடுகின்றோம். உன் தொண்டைச் செய்கின்றோம். ஆதிசேடன் படுக்கையில் நீ பள்ளி கொண்டிருக்கும் லாவண்யத்தை திருஷ்டி பற்றிக் கொள்ளாதபடி நீ அவதரித்த திருவோணத் திருநாளில் பல்லாண்டு பாடுகின்றோம். (ஆழ்வார் திருவடிகளே சரணம்)
கேது, சுக்கிரன் ஆதிக்கம் கொண்ட நாள் இன்று.
அதிர்ஷ்ட எண்கள் : 2– 6
பொருந்தா எண்கள் : 3 – 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: வெளிர் மஞ்சள் – அடர் பச்சை.