கிருஷ்ணபட்ச பிரதமை திதி மாலை 5.48 வரை. அதன்மேல் துவிதியை திதி. மூலம் நட்சத்திரம் காலை 8.30 வரை. பின்னர் பூராடம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை பிரதமை. அமிர்தசித்தயோகம் கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் மிருகசீரிஷம். சுபநேரங்கள் காலை 10.30 – 11.30, மாலை 4.30 – 5.30, ராகு காலம் 3.00 – 4.30, எமகண்டம் 9.00 – 10.30, குளிகை காலம் 12.00 – 1.30, வாரசூலம் – வடக்கு (பரிகாரம் – பால்) ஜேஷ்ட பகுனம் பிரதமை
மேடம் : திறமை, முன்னேற்றம்
இடபம் : மகிழ்ச்சி, சந்தோஷம்
மிதுனம் : நட்பு, உதவி
கடகம் : அன்பு, பாசம்
சிம்மம் : பரிவு, பாசம்
கன்னி : சோர்வு, வருத்தம்
துலாம் : சலனம், சஞ்சலம்
விருச்சிகம் : லாபம், லஷ்மீகரம்
தனுசு : போட்டி, ஜெயம்
மகரம் : தனம், சம்பத்து
கும்பம் : அமைதி, நிம்மதி
மீனம் : நலம், ஆரோக்கியம்
திருமழிசையாழ்வார் அருளிச் செய்த "திருச்சந்த விருத்தம்" பாசுரம்: நடந்த கால்கள் நொந்தனவோ? நகுங்க ஞாலம் ஏனமாய் இடந்த மெய் குலுங்கவோ? விலங்குமால் வரைச்சுரம் காவிரிக்குடந்தையுள் கிடந்தவாறு எழுந்திருந்து பேசு கேசனே! பொருளுரை: கேசவனே! அன்று ஸ்ரீ இராமாவதாரத்தில் அயோத்தியில் இருந்து ஸ்ரீலங்கா வரை நடந்து வந்தாய் உன் கால்கள் வலிக்கின்றனவா? பூமியை மீட்க வராகமானவனே! உன் திருமேனியில் ஏற்பட்ட அசதியால் உனக்கு சுரம் ஏற்பட்டுவிட்டதா? காவேரியின் கரையிலுள்ள திரு குடந்தையிலே சயனித்திருப்பவனே நீ எப்போதும் இப்படி படுத்திருப்பதை காண என் மனம் சகிக்கவில்லை. உன் பக்தன் திருமழிசையாழ்வான் வந்துள்ளேன். எனக்காகவாவது ஒரு முறை எழுந்திருந்து என்னோடு பேசு கேசவனே. (ஆழ்வார் திருவடிகளே சரணம்)
குரு, செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9, 3
பொருந்தா எண்கள்: 6, 2, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம்