அமாவாஸ்யை திதி காலை 9.15 வரை. பின்னர் பிரதமை திதி ரோகிணி நட்சத்திரம் பகல் 1.41 வரை. பின்னர் மிருக சீரிஷம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை பிரதமை. சித்த யோகம் மேல்நோக்குநாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் விசாகம், அனுஷம் சுபநேரங்கள்: 10.30 –11.30, மாலை 3.30 – 4.30, ராகுகாலம் 4.30 – 6.00, எமகண்டம் 12.00 – 1.30, குளிகை காலம் 3.00 – 4.30. வாரசூலம்–மேற்கு (பரிகாரம் – வெல்லம்)
மேடம் : பிணி, நோய்
இடபம் : களிப்பு, மகிழ்ச்சி
மிதுனம் : பரிவு, பாசம்
கடகம் : தனம், சம்பத்து
சிம்மம் : திடம், உறுதி
கன்னி : உதவி, நட்பு
துலாம் : சினம், பகை
விருச்சிகம் : அச்சம், பகை
தனுசு : நிறைவு, பூர்த்தி
மகரம் : தோல்வி, கவலை
கும்பம் : புகழ், பெருமை
மீனம் : உற்சாகம், வரவேற்பு
“திருச்சந்த விருத்தம்” பாசுரம் 28 படைத்த பாரிடந்து அளந்ததுண்டுமிழ்ந்து பௌவ நீர் படைக்கலம் விடுத்த பல்படைத் தடக்கைமாயனே. பொருளுரை – மாயங்கள் புரிவதில் வல்லவனே! அண்டங்களுக்கு காரணமான கடலைப் படைத்தாய்! அதன் பின் திருப்பாற் கடல் சென்று ஆதிசேஷனைப் படுக்கையாக்கி யோக நித்திரை செய்தாய். பிறகு தேவர்களுக்கு அமுதம் கொடுக்க பாற்கடலைக் கடைந்த பெருமை பெற்றாய். நீ உமிழ்ந்த பூமியை வராகமாய் அவதரித்து கோரைப்பற்களால் குத்தியெடுத்து வந்தாய். அதில் மூன்றடி நிலம் மகாபலியிடம் யாசித்து திரிவிக்கிரமனாய் முழுவதையும் அளந்து கொண்டாய். இந்தமாயச் செய்கையால் கோவித்து போரிட மாலி, சுமாலி இருவரையும் யமலோகம் அடைய ஆயுதங்களை ஏவினாய். அனேக திவ்ய ஆயுதங்களையுடைய வலிமையான திருக்கரங்களை உடைய அற்புதமானவே! புதன், சந்திரன் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7
பொருந்தா எண்கள்: 9,8,6
அதிர்ஷ்ட வர்ணங்கள்: சாம்பல், இலேசான பச்சை