சுக்கிலபட்ச சதுர்த்தசி திதி பின்னிரவு 1.25 வரை. அதன்மேல் பௌர்ணமி திதி. சுவாதி நட்சத்திரம் மாலை 5.16 வரை. பின்னர் விசாகம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை. சதுர்த்தசி சித்தயோகம். கரிநாள் சுபம் விலக்குக. சமநோக்குநாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் ரோவதி, அஸ்வினி. சுபநேரங்கள்: காலை 9.30 – 10.30, மாலை 4.30 – 5.30, ராகுகாலம் 10.30 – 12.00, எமகண்டம் 3.00 – 4.30, குளிகைகாலம் 7.30 – 9.00, வாரசூலம் – மேற்கு (பரிகாரம் – வெல்லம்) ஸ்ரீ நரசிம்ஹ ஜெயந்தி.
மேடம்: உண்மை, உதவி
இடபம்: பொறுமை, அமைதி
மிதுனம்: போட்டி, ஜெயம்
கடகம்: வெற்றி, அதிர்ஷடம்
சிம்மம்: அன்பு, ஆதரவு
கன்னி: அமைதி, பொறுமை
துலாம்: புகழ், பாராட்டு
விருச்சிகம்: கீர்த்தி, செல்வாக்கு
தனுசு: பிரீதி, சன்மானம்
மகரம்: அன்பு பாசம்
கும்பம்: நலம், ஆரோக்கியம்
மீனம்: சுபம், மங்களம்
இன்று ஸ்ரீ நரசிம்ஹ ஜெயந்தி திருமாளின் நான்காவது அவதாரம். நரசிம்ஹமாக அவதரித்த ஜெயந்தி. தன்னடியவான பிரகலாதனை இராட்சிப்பதற்காக நரன் கலந்து சிம்மமாக நான் தூணிலும் இருப்பேன் துரும்பிலும் இருப்பேன் என்று உலகிற்கு எடுத்துக் காட்டி தூணில் இருந்து வெளிப்பட்டு இரணியனை வதம் செய்து தன் அடியவர்களுக்கு அருளிய தினம். நாளை வைகாசி விசாகம். "ஆதி மூலமே" என்று அலறிய கஜேந்திரன் யானையை முதலையிடம் இருந்து மீட்ட நன்னாள். ஆழ்வார்களில் சிரேஷ்டரான நம்மாழ்வார் அவதரித்த திருநாள். திருமழிசையாழ்வார் அருளிய திருச்சந்த விருத்தம் நாளை மறுதினம் தொடரும்.
(“சோம்பலாய் இருப்பது முட்டாள்கள் எடுத்துக் கொள்ளும் விடுமுறை தினம்”)
சந்திரன், கேது கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6, 1
பொருந்தா எண்கள்: 9, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: வெளிர்பச்சை, வெளிர் மஞ்சள்.
இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)