17.12.2015 மன்மத வருடம் தட்சணாயனம் ஹேமந்தருது மார்கழி (தனூர்)மாதம் 01ஆம் நாள் வியாழக்கிழமை
சுக்கிலபட்ச சஷ்டி திதி பகல் 11.09 வரை. அதன் மேல் ஸப்தமி திதி. சதயம் நட்சத்திரம். முன்னிரவு 11.37 வரை பின்னர் பூரட்டாதி நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை ஸப்தமி. மரண யோகம் மேல்நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் பூசம், ஆயில்யம். சுபநேரங்கள் பகல் 10.45 – 11.45 பிற்பகல் 12.15 – 1.15. ராகுகாலம் 1.30 – 3.00. எமகண்டம் 6.00 – 7.30 குளிகை காலம் 9.00 – 10.30 வாரசூலம் – தெற்கு (பரிகாரம் – தைலம்) சகல சிவாலயங்களிலும் அதிகாலை திருவெம்பாவை பூஜை ஆரம்பம்.
மேடம் : உயர்வு, மேன்மை
இடபம் : நலம், ஆரோக்கியம்
மிதுனம் : சினம், பகை
கடகம் : வரவு, லாபம்
சிம்மம் : அன்பு, இரக்கம்
கன்னி : நட்பு, உதவி
துலாம் : பகை, எதிர்ப்பு
விருச்சிகம் : லாபம், லஷ்மீகரம்
தனுசு : சிரமம், தடை
மகரம் : அசதி, வருத்தம்
கும்பம் : புகழ், பெருமை
மீனம் : செல்வாக்கு, கீர்த்தி
ஸ்ரீ ஆண்டாள் அருளிய மார்கழி திருப்பாவை (‘‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்) விளக்கம்: செல்வம் கொழிக்கும் ஆயர்பாடியில் உள்ள இளம் கன்னியரே மார்கழி மாதம் பௌர்ணமியில் நீராட விரும்புபவர்கள் எம்மோடு சேருங்கள். நந்த கோபனின் குமாரன் அழகிய கண்களை உடைய யசோதையின் இளஞ்சிங்கம் கரியத்திருமேனியும் சிவந்த விழிகளையும் சூரிய சந்திரனைப்போன்ற ஒளியும் குளிர்ச்சியும் கொண்ட திருமுகத்தையும் கொண்ட நாராயணனின் கூரிய வேல் போன்ற கண்களால் நம் இதயத்தை தாக்கிய கொடும் செயலன் உலகத்தவர் போற்ற நம் நோன்பிற்கு உரிய வரத்தை தருவான்.
சனி, சூரியன் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று
அதிர்ஷ்ட எண்கள்: 1 –5 – 6
பொருந்தா எண்கள்: 7 – 8
அதிர்ஷ்ட வர்ணம்: மஞ்சள்
இராமரத்தினம் ஜோதி(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)