18.04.2020 சார்வரி வருடம் சித்திரை மாதம் 05 ஆம் நாள் சனிக்கிழமை
கிருஷ்ண பட்ச ஏகாதசி திதி பின்னிரவு 01.04 வரை, அதன்மேல் துவாதசி திதி, சதயம் நட்சத்திரம் நாள் முழுவதும், சிரார்த்த திதி தேய்பிறை ஏகாதசி, அமிர்த்தயோகம், மேல்நோக்கு நாள், சந்திராஷ்டம நட்சத்திரம் ஆயில்யம், சுபநேரங்கள் பகல் 10.30 – 11.30, மாலை 4.30– 5.30, ராகுகாலம் 9.00 –10.30, எமகண்டம் 1.30 – 3.00, குளிகை காலம் 6.00 – 7.30, வாரசூலம் கிழக்கு (பரிகாரம் தயிர்).
மேடம் – ஜெயம், புகழ்
இடபம் – அதிர்ஷ்டம், யோகம்
மிதுனம் – திறமை, ஆர்வம்
கடகம் – ஆசை, இரக்கம்
சிம்மம் – புகழ், செல்வாக்கு
கன்னி – சிரமம், தடை
துலாம் – பொறுமை, அமைதி
விருச்சிகம் – சுகம், ஆரோக்கியம்
தனுசு – பக்தி, ஆசி
மகரம் – உயர்வு, மேன்மை
கும்பம் – பணம், பரிசு
மீனம் – உயர்வு, மேன்மை
திருநாவுக்கரசர் நாயனார் குருபூசை, சித்திரை சதயம், திருவாமூரில் தோன்றி திருவதிகையில் சிவனருள் பெற்று திருப்புகழுரில் சிவனடி சேர்ந்த சீர்மையர், என்கடன் பணி செய்து கிடப்பதே எனப் பூங்கோயில் தோறும் புவர்வது முன் அலகிட்டு மெழுக்குமிட்டு பூமாலை புனைந்தேத்தி புகழ்ந்து பாடி தலையாரக் கும்பிட்டு உழவார பணிசெய்து 81 ஆண்டுகள் வாழ்ந்து ஆயிரம் பிறைகண்டவர், பாடிய பாடல்கள் 3066, பன்முறைப் பாடல்கள் 113, திருக் ஷகுறுந்தொகை பதிகங்கள் 100, திருத்தாண்டக பதிகங்கள் 99, சென்று பாடிய சிவதிருத்தலங்கள் 125, பாடிய திருமுறைகள் 4,5,6
செவ்வாய், சனிக் கிரகங்களின் ஆதிக்க நாளின்று
அதிர்ஷ்ட எண்கள் – 5, 6
பொருந்தா எண்கள் – 8, 2
அதிர்ஷ்டவர்ணங்கள் – மஞ்சள், நீலம்