18.03.2020 ஸ்ரீவிகாரி வருடம் பங்குனி மாதம் 05ஆம் நாள் புதன்கிழமை.
கிருஷ்ணபட்ச நவமி திதி காலை 8.29 வரை. அதன்மேல் தசமி திதி. பூராடம் நட்சத்திரம் மாலை 5.22 வரை. பின்னர் உத்தராடம் . சிரார்த்த திதி தேய்பிறை தசமி. அமிர்தயோகம் கீழ்நோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: ரோகினி, மிருகசீரிடம். சுபநேரங்கள்: காலை 9.30–10.30 மாலை 4.30–5.30, ராகுகாலம் 12.00–1.30, எமகண்டம் 7.30–9.00, குளிகைகாலம் 10.30–12.00. வாரசூலம்– வடக்கு (பரிகாரம்– பால்)
மேடம் : பகை, எதிர்ப்பு
இடபம் : போட்டி, ஜெயம்
மிதுனம் : விவேகம், வெற்றி
கடகம் : பகை, அச்சம்
சிம்மம் : பிணி, பீடை
கன்னி : தனம், சம்பத்து
துலாம் : லாபம், லக்ஷ்மீகரம்
விருச்சிகம் : புகழ், பெருமை
தனுசு : இன்பம், மகிழ்ச்சி
மகரம் : அன்பு, பாசம்
கும்பம் : அமைதி, தெளிவு
மீனம் : நலம், ஆரோக்கியம்
இன்று பூராடம் நட்சத்திரம் பஞ்ச பூத தத்துவத்தில் ஜலராசிக் கடவுளான வருணன் இந்நட்சத்திர தேவதையாவார். திருவானைக்கா இறைவன் ஜம்புகேஸ்வரர் சிவனையும் தாயார் அகிலாண்டேஸ்வரி அம்பிகையையும் இன்று வழிபடல் சிறப்பாகும். தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு ஆலயத்தில் தந்வந்தி பகவானுக்கு விஷேட சகஸ்ர நாம அர்ச்சனை.
(“விரோதிகளுக்கு அன்பைக்காட்டு அது அவர்களைப் பைத்தியமாக்கிவிடும்’’ – இயேசுநாதர்)
செவ்வாய், கேது கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 3 , 5
பொருந்தா எண்கள்: 7, 8, 2
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம்.
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)