17.03.2020 ஸ்ரீவிகாரி வருடம் பங்குனி மாதம் 04ஆம் நாள் செவ்வாய்க்கிழமை.
கிருஷ்ணபட்ச அஷ்டமி திதி காலை 8.56 வரை. அதன்மேல் நவமி திதி. மூலம் நட்சத்திரம் மாலை 5.00 வரை. பின்னர் பூராடம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை நவமி. அமிர்தசித்தயோகம் கீழ்நோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: கார்த்திகை ரோகினி. சுபநேரங்கள்: காலை 7.30–8.30 மாலை 5.30–6.00, ராகுகாலம் 3.0 –4.00, எமகண்டம் 9.0–10.30, குளிகைகாலம் 12.00–1.30. வாரசூலம்– வடக்கு (பரிகாரம்– பால்)
மேடம் : ஜெயம், மேன்மை
இடபம் : வெற்றி, அனுகூலம்
மிதுனம் : விரோதம், பயம்
கடகம் : போட்டி, ஜெயம்
சிம்மம் : சுகம், ஆரோக்கியம்
கன்னி : தனம், சம்பத்து
துலாம் : லாபம், லஷ்மீகரம்
விருச்சிகம் : முயற்சி, முன்னேற்றம்
தனுசு : மேன்மை, உயர்வு
மகரம் : சிக்கல், கவலை
கும்பம் : விரயம், செலவு
மீனம் : ஜெயம், உயர்வு
ஸ்ரீமன் நாராயணனின் நாம சங்கீர்தனமே இக்கலியுகத்தில் உயிர்களுக்கு உபாயம் என்பது சாஸ்திரங்களின் முடிவு. குருஷேத்திர போரில் பிஹ்மர் சொல்லும் சகஸ்ர நாமத்தை ஸ்ரீ கிருஷ்ணன் கேட்டு, சகஸ்ர நாமத்தில் சொல்வதெல்லாம் ‘‘சத்யம்’’ என்பதற்கு சாட்சியாகின்றான். மேலும் இன்று மூலம் நட்சத்திரம் ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபடல், விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் என்பன நன்று.
(“கெட்ட செயல்களுக்கும் நறுமண தைலத்திற்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இரண்டையும் மறைக்க முடியாது’’ – கார்லைல்)
சனி, சுக்கிரன் ஆதிக்கம் கொண்ட நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 6
பொருந்தா எண்கள்: 8–3
அதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம், பச்சை
இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)