12.03.2020 ஸ்ரீவிகாரி வருடம் மாசி மாதம் 29 ஆம் நாள் வியாழக்கிழமை
கிருஷ்ணபட்ச திரிதியை திதி மாலை 5.02 வரை. பின்னர் சதுர்த்தி திதி. சித்திரை நட்சத்திரம் முன்னிரவு 9.09 வரை. பின்னர் சுவாதி நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை திரிதியை. சித்தாமிர்தயோகம். சமநோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: பூரட்டாதி, உத்திரட்டாதி. சுபநேரங்கள்: பகல் 10.30–11.30 ராகுகாலம் 1.30–3.00 எமகண்டம் 6.00–7.30 குளிகைகாலம் 9.00–10.30. வாரசூலம்– தெற்கு (பரிகாரம்– தைலம்) பிரம்ம கல்பாதி, சுபமுகூர்த்த தினம்.
மேடம் : வெற்றி, ஜெயம்
இடபம் : பகை, விரோதம்
மிதுனம் : அமைதி, தெளிவு
கடகம் : சாந்தம், பொறுமை
சிம்மம் : வெற்றி, அதிர்ஷ்டம்
கன்னி : பிணி, பீடை
துலாம் : செல்வம், தனம்
விருச்சிகம் : புகழ், பெருமை
தனுசு :முயற்சி, முன்னேற்றம்
மகரம் : உற்சாகம், மகிழ்ச்சி
கும்பம் : விரயம், செலவு
மீனம் : சுகம், மகிழ்ச்சி
இன்று சங்கடஹர சதுர்த்தி விரதம். விரதமிருந்து விநாயகரை வழிபட்டால் வாழ்க்கையில் ஏற்படும் துன்பத் தடைகளாகிய சங்கடங்கள் தாமே ஒழிந்து விலகும். இவ்விரதத்தை சங்கடஹர சதுர்த்தி என்பர். ‘ஹர’ என்றால் ‘அறுத்துவிடு’ என்பர். சுவாதி நட்சத்திரம் வாயுபகவான் இந்நட்சத்திர தேவதையாவார். வாயு வேகத்தில் தன்னடியவர்களை இரட்சிக்கும் யோக நரசிம்ம சுவாமியை இன்று வழிபடுதல் நன்று. இவரை வழிபட்டு உய்வடைந்தவர்கள் வாமதேவர், வசிஷ்டர், கத்யபர், அத்திரி, ஜமதக்களி, கவுத்தமர், பரத்வாஜர் போன்ற ஸ்ப்த ரிஷிகளாவர்.
(“கெட்ட உள்நோக்கத்தோடு கூறப்படும் ஓர் உண்மை ஆயிரம் பொய்களை விட மோசமானதாகும்”– சார்ல்ஸ் ரூபியேக்)
குரு, சூரியன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1–5
பொருந்தா எண்கள்: ஏனையவை
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், ஊதா நிறங்கள்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)