11.03.2020 ஸ்ரீவிகாரி வருடம் மாசி மாதம் 28 ஆம் நாள் புதன்கிழமை
கிருஷ்ணபட்ச துவிதியை திதி முன்னிரவு 7.21 வரை. அதன்மேல் திரிதியை திதி. அஸ்தம் நட்சத்திரம் முன்னிரவு 10.44 வரை. பின்னர் சித்திரை நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை துவிதியை. மரணயோகம். சமநோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: சதயம், பூரட்டாதி. சுபநேரங்கள் 9.45–10.30 மாலை 4.30–5.30. ராகுகாலம் 12.00–1.30 எமகண்டம் 7.30–9.00.குளிகைகாலம் 10.30–12.00. வாரசூலம்–வடக்கு (பரிகாரம்– பால்)
மேடம் :மனநிம்மதி, உற்சாகம்
இடபம் :பகை, உறவினர்தொல்லை
மிதுனம் : மனநிறைவு, சந்தோஷம்
கடகம் : விவேகம், வெற்றி
சிம்மம் : பொறுமை, அமைதி
கன்னி : இன்பம், மகிழ்ச்சி
துலாம் : பரிவு, பாசம்
விருச்சிகம் : பணம், பரிசு
தனுசு : சங்கடம், சோதனை
மகரம் :உடல் உபாதை,மருத்துவசெலவு
கும்பம் : புகழ், செல்வாக்கு
மீனம் :வீண்பிரயாசை, ஏமாற்றம்
இன்று அத்தம் நட்சத்திரம். புதன்கிழமை மரணயோகம். அசுபநாள் எனக் கொள்க. எறிபத்தர் நாயனார், திருவள்ளுவர் (அடியவர்) குருபூஜை தினங்கள். தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய திருமாலை பாசுரம் 19. “குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி வடதிசை பின்பு காட்டி தென்திசை இலங்கை நோக்கி” உலகத்தவரே! கடல் நிறமுடைய எம்பெருமான் திருவரங்கநாதன் மேற்கு திசையில் சிரசை வைத்து, கிழக்கு திசையில் தன்பாதங்களை நீட்டி, வடக்கு திசைக்கு தன்பின்னழகைக் காட்டி, தென்திசையில் உள்ள இலங்கையை நோக்கி ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டிருக்கும் அழகினைக் கண்டு என் தேகம் உருகுகின்றதே! என் செய்வேன்.
(“நல்லது போனால் தெரியும் கெட்டது வந்தால் தெரியும்”)
சந்திரன், செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 7–5–6
பொருந்தா எண்கள்: 2–9–8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் நிறங்கள்.
இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோவில்)