10.03.2020 ஸ்ரீவிகாரி வருடம் மாசிமாதம் 27ஆம் நாள் செவ்வாய்க்கிழமை
கிருஷ்ணபட்ச பிரதமை திதி முன்னிரவு 9.43 வரை. அதன்மேல் துவிதியை திதி. உத்தரம் நட்சத்திரம். பின்னிரவு 12.22 வரை. பின்னர் அஸ்தம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை பிரதமை. அமிர்த சித்தயோகம். மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் அவிட்டம் சதயம். சுபநேரங்கள் பகல் 10.45–11.45, மாலை 4.30–5.30 ராகுகாலம் 3.00–4.30, எமகண்டம் 9.00–10.30, குளிகைகாலம் 12.00–1.30 வாரசூலம் – வடக்கு (பரிகாரம்– பால்) பால்குண பதலி பிரதமை.
மேடம் : துணிவு, வெற்றி
இடபம் : மனத்தெளிவு, வெற்றி
மிதுனம் : திறமை, முன்னேற்றம்
கடகம் : பாராட்டு, ஆசி
சிம்மம் : முயற்சி, மனோதிடம்
கன்னி : நட்பு, ஆதரவு
துலாம் : நலம், ஆரோக்கியம்
விருச்சிகம் : காரியசித்தி, மனநிறைவு
தனுசு : அசதி, சோம்பல்
மகரம் : சுகம், இன்பம்
கும்பம் : நிறைவு, பூர்த்தி
மீனம் : வாழ்வு, வளம்
தொண்டரடி பொடியாழ்வார் அருளிய 'திருமாலை' பாசுரம் 27. 'குரங்குகள் மலையைத் தூக்க குனிந்து தாம் புரண்டோடு தரங்க நீரடைக்கலுற்ற சலமிலா அணிலும் போலேன்' பொருளுரை –'சேதுபந்தனம்' ஸ்ரீராமர் கடலைக் கடந்து இலங்கை வர குரங்குகள் பெரிய கற்களை கொண்டு பாலம் போடுகின்றன. அவ்விடத்தில் கபடமற்ற அணில்கள் கூறுகின்றன 'இந்த குரங்குகளுக்கு கட்டிடக்கலை தெரியாது போலும் கற்களை ஒன்றன்மேல் ஒன்று அடுக்கினால் கட்டிடம் ஆகுமா கற்களுக்கிடையில் சாந்துபோட வேண்டுமல்லவா என்று கூறி கடலில் குனிந்து மணலில் புரண்டு கடல் மணலை கற்களுக்கிடையில் தூர்க்கின்றன. ஸ்ரீராமன் நெகிழ்ந்து இந்த அணில்களுக்கு நான் என்ன கைமாறு செய்வேன். இராம சேவை எவ்வளவு போற்றி மதிக்கின்றன என்று கூறி தனது வலது கை நடுவிரல்களால் அணிலின் முதுகை தடவுகின்றான். இன்றும் அணிலின் முதுகில் காணப்படும் மூன்று கோடுகளும் ஸ்ரீராமர் விரல் அடையாளங்களே. சூரியன், சனிக் கிரகங்களின் ஆதிக்க நாளின்று
அதிர்ஷ்ட எண்கள் – 1, 5
பொருந்தா எண்கள் – 8, 7
அதிர்ஷ்ட வர்ணங்கள் - மஞ்சள் வெளிர் நீலம்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)