07.03.2020 ஸ்ரீவிகாரி வருடம் மாசி மாதம் 24 ஆம் நாள் சனிக்கிழமை
சுக்கிலபட்ச திரயோதசி திதி பின்னிரவு 4.25 வரை. அதன்மேல் சதுர்த்தசி திதி. ஆயில்யம் நட்சத்திரம் பின்னிரவு 4.56 வரை. பின்னர் மகம் நட்சத்திரம். சிரார்த்த திதி சுக்கிலபட்ச திரயோதசி. மரணயோகம். கீழ்நோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரம் பூராடம். சுபநேரங்கள் காலை 7.30–8.30 மாலை 4.30–5.30 ராகுகாலம் 9.00–10.30 எமகண்டம் 1.30–3.00 குளிகைகாலம் 6.00–7.30. வாரசூலம்– கிழக்கு (பரிகாரம்– தயிர்)
மேடம் : நட்பு, உதவி
இடபம் : அன்பு, ஆதரவு
மிதுனம் : ஆதாயம், இலாபம்
கடகம் : திறமை, முன்னேற்றம்
சிம்மம் : தெளிவு, அமைதி
கன்னி : புகழ், தேர்ச்சி
துலாம் : பணிவு, பாராட்டு
விருச்சிகம் : கவனம், அவதானம்
தனுசு : நேர்மை, மேன்மை
மகரம் : பிரயாணம், அலைச்சல்
கும்பம் : காரியசித்தி, அனுகூலம்
மீனம் : குழப்பம், வெறுப்பு
இன்று சுக்கிலபட்ச சனி மஹா பிரதோஷம். சந்தியா காலத்தில் சிவாலயம் சென்று சிவனையும் நந்தீஸ்வரரையும் வழிபடல் நன்று. நாளை மணக்கால் நம்பிகள் திருநட்சத்திரம். ஸ்ரீவைஷ்ணவத்தை வளர்த்த குருபரம்பரையினர். “தேசமுய்யக் கொண்டவர் தாள் சென்னி வைப்போன வாழியே தென்னரங்கன் சீரருளைச் சேர்ந்திருப்போன் வாழியே மாசி மகம் தனில் விளங்க வந்துதித்தான் வாழியே மால் மணக்கால் நம்பி பதம் வையகத்தில் வாழியே!
(“ஆசைகளை அடக்க வேண்டியதில்லை. அதை சீரமைப்பது தான் முக்கியம். ஆடம்பரம் என்பது போலியான வறுமை. மனநிறைவு என்பது வற்றாத செல்வம்”– சாக்ரடீஸ்) கேது, புதன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1–5–2
பொருந்தா எண்கள்: 7–8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்