06.03.2020 ஸ்ரீவிகாரி வருடம் மாசி மாதம் 23 ஆம் நாள் வெள்ளிக்கிழமை
சுக்கிலபட்ச ஏகாதசி திதி காலை 7.44 வரை. அதன்மேல் துவாதசி திதி பின்னிரவு 6.14 வரை. பின்னர் திரயோதசி திதி. புனர்பூசம் காலை 6.52 வரை. அதன்மேல் பூசம் நட்சத்திரம் மறுநாள் காலை 6.03 வரை. பின்னர் ஆயில்யம் நட்சத்திரம். சிரார்த்த திதி. வளர்பிறை துவாதசி. சித்தயோகம் காலை 6.05 வரை. பின்னர் மரணயோகம். மேல்நோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரம் மூலம். சுபநேரங்கள்: காலை 9.00–10.00. மாலை 4.30–5.30. ராகுகாலம் 10.30–12.00. எமகண்டம் 3.00–4.30. குளிகைகாலம் 7.30–9.00. சுபமுகூர்த்த தினம். திதி, நட்சத்திர அவமாகம்.
மேடம் : உயர்வு, நட்பு
இடபம் : பணிவு, செல்வாக்கு
மிதுனம் : ஆசை, வீண்செலவு
கடகம் : பணம், பரிசு
சிம்மம் : செலவு, பற்றாக்குறை
கன்னி : உயர்வு, மேன்மை
துலாம் :முன்னேற்றம், ஆர்வம்
விருச்சிகம் : முயற்சி, அனுகூலம்
தனுசு : துணிவு, காரியசித்தி
மகரம் : பக்தி, வழிபாடு
கும்பம் : தடை, குழப்பம்
மீனம் : ஜெயம், வெற்றி
இன்று சுக்கிலபட்ச ஸர்வ ஏகாதசி விரதம். வைஷ்ணவ ஏகாதசி ஸ்ரீமன் நாராயணனை வழிபடல் நன்று. தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிய “திருமாலை” நமனும் முத்கலனும் பேச, நகரில் நின்றார்கள் கேட்க நரகமே சுவர்க்கமாகும். நாமங்களுடையன் நம்பி” முத்கலன் என்கின்ற கொடும்பாவி மரிக்க, அவனை எமதூதர்கள் நரகத்தில் எமனிடம் கொண்டு சென்று நிறுத்த எமன் முத்கலனை நோக்கி ஒரு நாளாகிலும் நாராயண நாமத்தை உச்சரித்து இருந்தால் நீ நரகம் வந்திருக்கமாட்டாய் என்று நாராயண நாம மகிமையைக் கூறுகின்றான். உள்ளே நரகத்தில் வேதனை அனுபவிப்பவர்கள் காதில் எமன் பேசியது விழ, எமன் நரகத்தை நோக்க நரகமே சொர்க்கமாக மாறுகின்றது. கேட்டது இவ்வளவு புண்ணியம் என்றால் சொன்னால் எவ்வளவு புண்ணியம் (தொடரும்).
(“முட்டாள்களோடு சண்டை போடாதே. பார்க்கிறவர்களுக்கு யார் முட்டாள் எனத் தெரியாது”)
சுக்கிரன், ராகு கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 6–1
பொருந்தா எண்கள்: 3–8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், பச்சை
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)