04.03.2020 ஸ்ரீவிகாரி வருடம் மாசி மாதம் 21 ஆம் நாள் புதன்கிழமை
சுக்கிலபட்ச நவமிதிதி காலை 9.28 வரை. அதன்மேல் தசமி திதி. மிருகசீரிஷம் நட்சத்திரம் காலை 7.15 வரை. பின்னர் திருவாதிரை நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை தசமி. சித்தயோகம் மேல்நோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரம் அனுஷம். சுபநேரங்கள் காலை 9.30–10.30 ராகுகாலம் 12.00–1.30 எம கண்டம் 7.30–9.00 குளிகைகாலம் 10.30–12.00. வாரசூலம்– வடக்கு (பரிகாரம்– பால்) நாளை வாஸ்துநாள் வாஸ்து நேரம் பகல் 10.06–10.42.
மேடம் : அச்சம், பகை
இடபம் : அசதி, சோர்வு
மிதுனம் : பயம், மனக்குழப்பம்
கடகம் : பக்தி, கோபுரதரிசனம்
சிம்மம் : களிப்பு, கொண்டாட்டம்
கன்னி : சுகம், ஆரோக்கியம்
துலாம் : காரியசித்தி, மனநிம்மதி
விருச்சிகம் : அதிர்ஷ்டம், வெற்றி
தனுசு : நற்செய்தி, மகிழ்ச்சி
மகரம் : புகழ், செல்வாக்கு
கும்பம் : விரயம், செலவு
மீனம் : லாபம், லக் ஷ்மீகரம்
நாளை குலசேகராழ்வார் திருநட்சத்திரம். நான்காம் திருமொழி “மின்னைய நுண்ணிடையார் உருப்பசியும் மேனகையும் அன்னவர் தம் பாடலொடும் ஆடலை ஆதரியேன் தென்ன என வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள் அன்னனை பொற்குவடாம் அருந்தவத்தனாவேனே” மின்னல் போன்ற நுண்ணிய இடையையுடைய ஊர்வசியும் மேனகையும் போல் தேவநங்கையர் ஆடலும் பாடலும் நான் விரும்பவில்லை. அவை நடக்கும் இந்திரன் சபையில் வீற்றிருக்க நான் விரும்பவில்லை. வண்டுகள் கூட்டம் ரீங்கரிக்கும் திருவேங்கடமலையில் வீற்றிருப்பதையே வேண்டுகிறேன். ராகு, சந்திரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1–5
பொருந்தா எண்கள்: 9–8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)