04.02.2020 ஸ்ரீவிகாரி வருடம் தை மாதம் 21 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை
சுக்கில பட்ச தசமி திதி மாலை 6.46 வரை. அதன் மேல் ஏகாதசி திதி. ரோகிணி நட்சத்திரம் முன்னிரவு 11.11 வரை. பின்னர் மிருகசீரிஷம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை தசமி. அமிர்தசித்தயோகம். மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் சுவாதி, விசாகம். சுபநேரங்கள் பகல் 10.30–11.30 மாலை 4.30–5.30 ராகுகாலம் 3.00–4.30 எமகண்டம் 9.00–10.30 குளிகை காலம் 12.00–1.30. வாரசூலம்–வடக்கு (பரிகாரம் –பால்) ரோகிணி நட்சத்திர தினமான இன்று கண்ணனை வழிபடல் நன்று.
மேடம் : வெற்றி, அதிர்ஷ்டம்
இடபம் : நலம், ஆரோக்கியம்
மிதுனம் : வாழ்வு, வளம்
கடகம் : அமைதி, தெளிவு
சிம்மம் : உழைப்பு, உயர்வு
கன்னி : லாபம், ஆதாயம்
துலாம் : லாபம், லக் ஷ்மீகரம்
விருச்சிகம் : ஜெயம், வெற்றி
தனுசு : போட்டி, ஜெயம்
மகரம் : அன்பு, ஆதரவு
கும்பம் : தனம், சம்பத்து
மீனம் : உற்சாகம், மகிழ்ச்சி
திருமழிசை ஆழ்வார் திருநட்சத்திரம் தை 27. அவதரிக்கும்போது வெறும் பிண்டமாக அவதரித்தவர். மான் வயிற்றில் ரிஷி சிங்கரும், முயல் வயிற்றில் கெளதமரும், புற்றிலிருந்து வால்மீகியும், மண்குடத்தில் வசிட்டரும் அவதரித்தது போல் பார்கவ முனிவருக்கும் அவர் மனைவி கனகாஸ்திற்கும் தவப்பயனாய் திருமாலின் சுதர்ஸன சக்கரத்தின் அம்சமாய் அவதரித்தவர் திருமழிசையாழ்வார். பரம பதத்திலிருந்து பிராட்டி மகாலக் ஷ்மி தாயார் பிண்டத்தை நோக்க லக் ஷ்மி பிராட்டியின் அருட்பார்வை பெற்றவுடன் அதற்கு கை, கால், உடம்பு எல்லாம் தோன்றி ஜீவனும் உண்டாகி அழத்தொடங்கியது. குழந்தையின் கையில் உள்ள பெருவிரலில் பால் சுரக்கும்படி லக் ஷ்மி பிராட்டியார் அருள குழந்தை பசி எடுக்கும் போதெல்லாம் விரலைச் சுவைத்து பசியாற்றிக்கொண்டான். இந்நிகழ் வை அரிசமய தீபம் 24 ஆம் 25 ஆம் பாடல் விளக்குகின்றது. (தொடரும்)
ராகு, சூரியன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1–5–6
பொருந்தா எண்: 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம், பச்சை
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)