02.02.2020 ஸ்ரீ விகாரி வருடம் தை மாதம் 19 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
சுக்கில பட்ச அஷ்டமி திதி மாலை 5.25 வரை. அதன் மேல் நவமி திதி. பரணி நட்சத்திரம் முன்னிரவு 8.53 வரை. பின்னர் கார்த்திகை நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை அஷ்டமி சித்தயோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம்: அஸ்தம் சித்திரை. சுபநேரங்கள்: பகல் 10.30 – 11.30 மாலை 3.30 – 4.30 ராகுகாலம் 4.30 – 6.00 எமகண்டம் 12.00 – 1.30 குளிகை காலம் 3.00 – 4.30 வாரசூலம் – மேற்கு (பரிகாரம் – வெல்லம்)
மேடம் : சோர்வு, அசதி
இடபம் : உயர்வு, மேன்மை
மிதுனம் : சாதனை, புகழ்
கடகம் : அமைதி, தெளிவு
சிம்மம் : நட்பு, உதவி
கன்னி : களிப்பு, மகிழ்ச்சி
துலாம் : லாபம், ஆதாயம்
விருச்சிகம் :பிரயாணம், காரியசித்தி
தனுசு : நலம், ஆரோக்கியம்
மகரம் : புகழ், செல்வாக்கு
கும்பம் : கீர்த்தி, புகழ்
மீனம் : பொறுமை, அமைதி
இன்று பீஷ்மாஷ்டமி துர்க்காஷ்டமி கண்ணூறு கழித்தல் என்பன நன்று. தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு ஆலயத்தில் பகல் திருமஞ்சனம், அன்னதானம் என்பன நடைபெறும். நாளை முதல் திருமழிசையாழ்வார் பற்றிய குறிப்புக்கள்.
(“மரணத்தில் வேதனை இல்லை வாழ்வில் தான் வேதனை இருக்கிறது. எனினும் மனிதன் வாழத்தான் விரும்புகிறான்.” – ஜாக் பெண்டன்)
சந்திரன், சனிக் கிரகங்களின் ஆதிக்க நாளின்று
அதிர்ஷ்ட எண்கள்: 1 – 5
பொருந்தா எண்கள்: 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், பச்சை
இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)