29.01.2020 ஸ்ரீவிகாரி வருடம் தைமாதம் 15 ஆம் நாள் புதன்கிழமை
சுக்கிலபட்ச சதுர்த்தி திதி பகல் 10.05 வரை. அதன்மேல் பஞ்சமி திதி. பூரட்டாதி நட்சத்திரம் பகல் 11.48 வரை. பின்னர் உத்திரட்டாதி நட்சத்திரம். சிராத்த திதி வளர்பிறை பஞ்சமி. அமிர்த சித்தயோகம். கீழ்நோக்குநாள். சந்தராஷ்டம நட்சத்திரங்கள் ஆயில்யம் மகம். சுபநேரங்கள் பகல் 10.30–11.30 மாலை 4.30–5.30 ராகுகாலம் 12.00–1.30 எமகண்டம் 7.30–9.00 குளிகைகாலம் 10.30–12.00 வராசூலம்– வடக்கு (பரிகாரம்– பால்) வசந்த பஞ்சமி.
மேடம் : பொறாமை, நஷ்டம்
இடபம் : உயர்வு, மேன்மை
மிதுனம் : அன்பு, ஆதரவு
கடகம் : போட்டி, ஜெயம்
சிம்மம் : மகிழ்ச்சி, சந்தோஷம்
கன்னி : லாபம், ஆதாயம்
துலாம் : அசதி, வருத்தம்
விருச்சிகம் : இன்பம், மகிழ்ச்சி
தனுசு : நன்மை, அதிர்ஷ்டம்
மகரம் : சோர்வு, அசதி
கும்பம் : விவேகம், வெற்றி
மீனம் : யோகம், அதிர்ஷ்டம்
ஸ்ரீவைஷ்ணவத்தில் நாமங்கள் ஆயிரமுடைய நம்பெருமாள். அடியார்களை பெரிதும் கவர்ந்த திருநாமம் “நாராயணா என்பது. இந்நாமம் இம்மை நலனும் மறுமை நலனும் தரவல்லது. “நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் என்பது திருமங்கையாழ்வார் பாடல் இதனை கம்பர் ராமாயணத்தில் மும்மைசால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும் தம் மையே தமக்கு நல்கும் தனிப்பெருமை பதத்தை தானே இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை இராம என்னும் செம்மை சேர்நாமம் தன்னைக் கண்களில் தெரியக் கண்டான்” (தொடரும்)
சந்திரன், கேது கிரகங்களின் ஆதிக்கநாளின்று
அதிர்ஷ்ட எண்கள்: 5–1–6
பொருந்தா எண்கள்: 9–8–7
அதிர்ஷ்ட வர்ணங்கள்: வெளிர் பச்சை, வெளிர் மஞ்சள்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)