28.01.2020 ஸ்ரீவிகாரி வருடம் தை மாதம் 14ஆம் நாள் செவ்வாய்க்கிழமை.
சுக்கில பட்ச திரிதியை திதி காலை 8.02 வரை. அதன் மேல் சதுர்த்தி திதி. சதயம் நட்சத்திரம் காலை 9.18 வரை. பின்னர் பூரட்டாதி நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை சதுர்த்தி. மரண யோகம். மேல் நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் ஆயில்யம். சுபநேரங்கள் காலை 7.30–8.30, மாலை 4.30–5.30, ராகு காலம் 3.00–4.30, எமகண்டம் 9.00–10.30, குளிகை காலம் 12.00–1.30. வாரசூலம் வடக்கு (பரிகாரம் – பால்) சுக்கிலபட்ச சதுர்த்தி விரதம். அங்காரக சதுர்த்தி வரகுந்த சதுர்த்தி மல்லிகை பூக்களால் சிவபூஜை செய்ய காரியத் தடைகள் விலகும்.
மேடம் : சிக்கல், சங்கடம்
இடபம் : உதவி, நட்பு
மிதுனம் : நன்மை, யோகம்
கடகம் : சிரமம், தடை
சிம்மம் : அமைதி, நிம்மதி
கன்னி : லாபம், லக்ஷ்மீகரம்
துலாம் : சுகம், ஆரோக்கியம்
விருச்சிகம் : உயர்வு, மேன்மை
தனுசு : வெற்றி, அதிர்ஷ்டம்
மகரம் : நற்செயல், பாராட்டு
கும்பம் : நிறைவு, பூர்த்தி
மீனம் : அன்பு, பாசம்
விஷ்ணு பரத்துவத்தைக் கூறுவது, விஷ்ணு என்ற சொல்லுக்கு 'எங்கும் பரந்துள்ளவன்' நன்மை செய்பவன். அடியவர்களை மாயையில் இருந்து விடுவிப்பவன். எல்லாப் பொருட்களிலும் ஊடுருவி நிற்பவன் என்றெல்லாம் பொருள் கூறினாலும் 'பகவான்' என்ற சொல்லையே பலர் பயன்படுத்துகின்றனர். இதனாலேயே ஸ்ரீவைஷ்ணவத்தை பாகவத சமயம், பாகவத தருமம் என்று கூறுகின்றனர். பகவான் என்ற பெயரின் அடிச்சொல் ''பகம்'' என்பது. ஆறு கல்யாண குணங்களை உடையவன் ‘‘பகவான்’’ என விளக்குவர். தமிழர்களிடையே பெரிதும் வழங்கும் சொல். ‘‘திருமால்’’ 'மால்' என்பதற்கு அடியவர்களிடம் ‘‘வியா மோகம்’’ என்பர் பிறிதொரு வாசு தேவன் என்பது. (நாளை தொடரும்)
சூரியன், சந்திரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று
அதிர்ஷ்ட எண்கள் 1, 6
பொருந்தா எண்கள் 3, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள் மஞ்சள், பச்சை
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)