10.01.2020 ஸ்ரீவிகாரி வருடம் மார்கழி மாதம் 25 ஆம் நாள் வெள்ளிக்கிழமை.
பெளர்ணமி திதி பின்னிரவு 1.43 வரை. பின்னர் கிருஷ்ண பட்ச பிரதமை திதி. திருவாதிரை நட்சத்திரம் மாலை 3.35 வரை. பின்னர் புனர்பூசம்– சிரார்த்த திதி பெளர்ணமி. சித்தயோகம். மேல்நோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் மூலம் பூராடம். சுபநேரங்கள் காலை 9.30–10.30 மாலை 4.30–5.30. ராகுகாலம் 10.30–12.00 எமகண்டம் 3.00–4.30 குளிகைகாலம் 7.30–9.00. வாரசூலம்– மேற்கு (பரிகாரம்– வெல்லம்) பெளர்ணமி விரதம் வட சாவித்திரி விரதம். கருட வழிபாடு நன்று. தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு ஆலயத்தில் சத்திய நாராயண பூஜை. அன்னதானம்.
மேடம் : செலவு, விரயம்
இடபம் : புகழ், பாராட்டு
மிதுனம் : தனம், சம்பத்து
கடகம் : போட்டி, ஜெயம்
சிம்மம் : கோபம், பகை
கன்னி : முயற்சி, முன்னேற்றம்
துலாம் : அதிர்ஷ்டம், நன்மை
விருச்சிகம் : நிறைவு, முன்னேற்றம்
தனுசு : வெற்றி, அதிர்ஷ்டம்
மகரம் : சுகம், ஆரோக்கியம்
கும்பம் : மறதி, விரயம்
மீனம் : சுகம், ஆரோக்கியம்
தைப்பொங்கல் 15.01.2020 சூரிய பகவானுக்குரிய சிற்பத்தை நோக்கும்போது அவருக்கு நான்கு தேவியர். மத்ஸய புராணத்தில் குறிப்பிட்டபடி ரஜனி, சுவர்ணா, சாயா, ஸ்வர்சலா என்னும் நால்வர். சூரிய பகவானுக்கு ஸவிதா, பூஷன், பாகன், விவஸ்வான், மித்திரன், அர்யம், விஷ்ணு போன்ற பலவித அம்சங்களில் குறிப்பிடப்படுகின்றான். விஷ்ணுவுடன் சேர்ந்து சூரிய நாராயணன் என்றும் சிவனுடன் சேர்ந்து சிவசூரியன் என்றும் சொல்லப்படுகின்றான். (தொடரும்)
சூரியன், சுக்கிரன் ஆதிக்கம் கொண்ட நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1–6
பொருந்தா எண்கள்: 3–8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை, மஞ்சள்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)