கிருஷ்ணபட்ச ஸப்தமி திதி மாலை 5.07 வரை. அதன் மேல் அஷ்டமி திதி. உத்திராடம் நட்சத்திரம் மாலை 5.58 வரை. பின்னர் திருவோணம் நட்சத்திரம் சிரார்த்த திதி தேய்பிறை ஸப்தமி சித்தயோகம் மாலை 5.58 வரை. பின்னர் மரண யோகம் மேல் நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் திருவாதிரை, புனர்பூசம். சுபநேரங்கள்: காலை 9.30– 10.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 10.30– 12.00, எமகண்டம் 3.00– 4.30, குளிகை காலம் 7.30– 9.00, வாரசூலம்–மேற்கு (பரிகாரம்–வெல்லம்) பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள். சுப முகூர்த்த நாள்.
மேடம் : மகிழ்ச்சி, சந்தோசம்
இடபம் : உற்சாகம், வரவேற்பு
மிதுனம் : பணிவு, செல்வாக்கு
கடகம் : புகழ், சாதனை
சிம்மம் : இன்பம், சந்தோசம்
கன்னி : யோகம், அதிர்ஷ்டம்
துலாம் :களிப்பு, கொண்டாட்டம்
விருச்சிகம் : தொல்லை, சங்கடம்
தனுசு : அன்பு, பாசம்
மகரம் : தடை, தாமதம்
கும்பம் : தெளிவு, நிம்மதி
மீனம் ; உழைப்பு, உயர்வு
திருமழிசையாழ்வார் ஆழ்வார்களில் நான்காமவர் திருமாலின் வலது கரத்தை அலங்கரிக்கும் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரின் அம்சமாக அவதரித்தவர். இவர் அருளிச் செய்த பிரபந்தங்கள் நான் முகன் திருவந்தாதி திருச் சந்த விருத்தம் முதலியன. திருச்சந்த விருத்தம் நாலாயிரத் திவ்ய பிரபந்தங்களில் தனிச் சிறப்புக் கொண்டது. நூற்று இருபது பாசுரங்களை உடையது. இது சந்தக் கலிவிருத்த யாப்பு வகையைச் சேர்ந்தது. ஓசை நயம் மிகக்கொண்டது. ஒவ்வொரு பாட்டும் தாளவாத்தியத்தை தட்டுவது போன்ற ஓசை நயத்தோடு விளங்குகின்றது. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என்று கணக்கெல்லாம் போட்டு காண்பிக்கின்றார் ஆழ்வார். துள்ளல் ஓசையில் அமைந்தது. பக்தி சாரணான இவர் பாசுரங்களுக்கு பொருளுரை எழுதுவது சற்று சிரமம். “துவாரகா” பதியை மனதில் நிறுத்தி எழுதத் தொடங்குகின்றேன். நிச்சயம் கைகூடும். இனிவரும் நாட்களில் இவர் பாசுரங்களை அனுபவிப்போம். திருமழிசையாழ்வார் திருவடிகளே சரணம்.
(“உலகம் செழிப்பாக இருப்பதற்கு முக்கியமானவை மூன்று அவை அன்பு, இரக்கம், கருணை) சந்திரன், சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று
அதிர்ஷ்ட எண்கள்: 7, 6
பொருந்தா எண்கள்: 9, 8, 3
அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை கலந்த வர்ணங்கள்
இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)