28.12.2019 ஸ்ரீவிகாரி வருடம் மார்கழி மாதம் 12ஆம் நாள் சனிக்கிழமை
சுக்கில பட்ச துவிதியை திதி பகல் 11.56 வரை. அதன்மேல் திரிதியை திதி. உத்தராடம் நட்சத்திரம் முன்னிரவு 07.49 வரை. பின்னர் திருவோணம் நட்சத்திரம். சிரார்த்த திதி. வளர்பிறை திரிதியை. சித்த யோகம். மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் திருவாதிரை, புனர்பூசம். சுபநேரங்கள் பகல்10.45 – 11.45. மாலை 04.45–5.45. ராகு காலம் 09.00 – 10.30. எமகண்டம் 01.30–3.00. குளிகைகாலம் 06.00 – 07.30. வாரசூலம் கிழக்கு. பரிகாரம் தயிர். சனி பகவான் சிறப்பு ஆராதனை நாள், கெருட தரிசனம் நன்று. திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை
மேடம் :சுகம், ஆரோக்கியம்
இடபம் :இலாபம், ஆதாயம்
மிதுனம் :நன்மை, அதிர்ஷ்டம்
கடகம் :செலவு, விரயம்
சிம்மம் :நட்பு, உதவி
கன்னி :வெற்றி, அதிர்ஷ்டம்
துலாம் :தனம், சம்பத்து
விருச்சிகம் :புகழ், பெருமை
தனுசு :தோல்வி, கவலை
மகரம் :அமைதி, தெளிவு
கும்பம் :நலம், ஆரோக்கியம்
மீனம் :உற்சாகம், தெளிவு
ஸ்ரீவைகுண்ட ஏகாதசி 06.01.2020. ஸ்ரீ ஐயப்ப தியான சர்வேஸ்வரன் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் நித்ய வாசம் செய்யுமிடம் ஸ்ரீவைகுண்டம் என்று அழைக்கப்படும். ஸ்ரீவைஷ்ணவ திவ்ய தேசங்களில் 108ஆவது திவ்ய தேசம் முதலாவது திவ்யதேசம் ஸ்ரீரங்கம். ஆதலால்தான் ஸ்ரீரங்கம் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுகின்றது. வைகுண்டம் என்று பெயர் ஏற்படக் காரணம் நாம் வாழும் இவ்வுலகில் பாவம் புண்ணியம் போன்ற கர்மாக்களினால் நம் ஞானம் அனைத்தும் மறைக்கப்பட்டுள்ளது. கர்ம சம்பந்தம் இல்லாத நாடு வைகுண்டம். ஞானத்தோடு கூடியவர்கள் அங்கு வாழ்வதால் அதற்கு வைகுண்டம் என்று பெயர் ஏற்பட்டது. நாம் வாழும் இத்தேசம் இருள் சூழ் ஞாலம். நல பந்தமில்லாத நாடு. ஆதலால் அதற்கு தெளிவிசும்பு திருநாடு என்று பெயர். தெரியாத கண்ணால் பார்க்காத உலகம் சென்று பார்த்துவிட்டு வந்து சொன்னவர்கள் யாருமில்லை. எவர் ஒருவர் அர்ச்சிராதி மார்க்கத்தால் ஸ்ரீவைகுண்டம் செல்கிறார்களோ "நச்ச புனராவர்த்தே" மீண்டும் இப்பூமியில் பிறப்பதில்லை என்று வேதங்கள் கூறுகின்றன. (தொடரும்)
சூரியன், கேது கிரகங்களின் ஆதிக்க நாளின்று
அதிர்ஷ்ட எண்கள் – 1,2,5,6
பொருந்தா எண்கள் – 8,7
அதிர்ஷ்ட வண்ணங்கள் – பச்சை, மஞ்சள், பொன்னிறம்