17.12.2019 ஸ்ரீவிகாரி வருடம் மார்கழி மாதம் 01ஆம் நாள் தட்சிணாயனம் தனுர் மாதம் செவ்வாய்க்கிழமை
கிருஷ்ணபட்ச சஷ்டி திதி பின்னிரவு 03.02 வரை. அதன் மேல் ஸப்தமி திதி. மகம் நட்சத்திரம் பின்னிரவு 03.07 வரை. பின்னர் பூரம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை சஷ்டி. சித்தயோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் திருவோணம். சுபநேரங்கள் பகல் 10.45– 11.45. பிற்பகல் 01.45–02.45. ராகுகாலம் 03.00–04.30. எமகண்டம் 09.00–10.30. குளிகை காலம் 12.00–01.30. வாரசூலம் வடக்கு. பரிகாரம் பால். தனுர் மாத பூஜாரம்பம். தெகிவளை ஸ்ரீவிஷ்ணுவாலயத்தில் திருப்பாவை நோன்பு. திருப்பள்ளியெழுச்சி.
மேடம் : துணிவு, துணை
இடபம் : செலவு, பற்றாக்குறை
மிதுனம் : இன்பம், மகிழ்ச்சி
கடகம் : இலாபம், லக்ஷ்மீகரம்
சிம்மம் : யோகம், அதிர்ஷ்டம்
கன்னி : துன்பம், கவலை
துலாம் : உற்சாகம், மகிழ்ச்சி
விருச்சிகம் :பொறுமை, அதிர்ஷ்டம்
தனுசு : பிரயாணம், அசதி
மகரம் : அமைதி, சாந்தம்
கும்பம் : விவேகம், வெற்றி
மீனம் : உயர்வு, மேன்மை
திருப்பள்ளியெழுச்சி தொண்டரடிப் பொடியாழ்வார் "விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய் அழுங்கிய யானையின் அருந்துயர் கெடுத்த அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே'' ஸ்ரீஆண்டாள் அருளிய திருப்பாவை "மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாய் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிலையீர் ஏரார்ந்த கன்னி யசோதை இளஞ்சிங்கம். நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தாலோரெம்பாவாய். ஆயர் பாடி இளம் கன்னியரே மார்கழி நிலவில் எங்களோடு நீராட வாருங்கள். யசோதையின் இளஞ்சிங்கம் அழகிய திருமுகத்தைக் கொண்டவன் கூரிய வேல் போன்ற கண்களை உடைய நாராயணன் நம் பாவை நோன்பிற்கு உரிய பலனைத் தருவான் (தொடரும்)
சனி, புதன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள் 1, 5
பொருந்தா எண்கள் 7, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள் மஞ்சள், பச்சை, நீலம்.
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)