07.12.2019 ஸ்ரீ விகாரி வருடம் கார்த்திகை மாதம் 21 ஆம் நாள் சனிக்கிழமை.
சுக்கிலபட்ச தசமி திதி. காலை 6.50 வரை. அதன் மேல் ஏகாதசி திதி. ரேவதி நட்சத்திரம் பின்னிரவு 2.08 வரை. பின்னர் அஸ்வினி நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை ஏகாதசி. மரணயோகம் சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம்: உத்திரம். சுப நேரங்கள்: பகல் 10.45 – 11.45, மாலை 4.45 – 5.45, ராகுகாலம் 9.00 – 10.30, எமகண்டம் 1.30 – 3.00, குளிகைகாலம் 6.00 – 7.30, வாரசூலம் – கிழக்கு (பரிகாரம் – தயிர்). திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசல நாயகர் மஹா ரதோற்சவம்.
மேடம் : அச்சம், பகை
இடபம் : தடை, தாமதம்
மிதுனம் : அன்பு, பாசம்
கடகம் : சுகம், ஆரோக்கியம்
சிம்மம் : ஏமாற்றம், கவலை
கன்னி : நற்செயல், பாராட்டு
துலாம் : தனம், சம்பத்து
விருச்சிகம் : சுபம், மங்களம்
தனுசு : பணம், பரிசு
மகரம் : நன்மை, அதிர்ஷ்டம்
கும்பம் : ஆக்கம், நிறைவு
மீனம் : செலவு, விரயம்
“திருமங்கையாழ்வார்” பத்தாம் திருமொழி “வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் நத்தா கொழுஞ்சுடரே! எங்கள் நம்பி சிந்தாமணியே! திருவேங்கடம் மேய எந்தாய்! இனியான் உண்மை என்றும் விடேனே” அணையா விளக்கே விரும்பியதை தரும் சிந்தாமணியே! திருவேங்கடத்தில் உறையும் என் தலைவனே என்பால் வந்து என் நெஞ்சினுள் புகுந்தாய். மனத்துள் பொருந்தி விட்டாய். இனிமேல் உன்னை வெளியே செல்லவிட மாட்டேன். (தொடரும்)
(“மேலே ஏறும் போது சந்திப்பவர்களிடம் இனிமையாய் பழகுங்கள். ஏனெனில் கீழே இறங்கும் போது அவர்களைத்தான் சந்திப்பீர்கள்” – மிஸ்னர்)
கேது, ராகு கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள் : 1 – 2 – 5
பொருந்தா எண்கள் : 4 – 7 – 8
அதிர்ஷ்ட வர்ணங்கள் :மஞ்சள், நீலம், பச்சை