06.12.2019 ஸ்ரீவிகாரி வருடம் கார்த்திகை மாதம் 20 ஆம் நாள் வெள்ளிக்கிழமை
சுக்கில பட்ச தசமி திதி நாள் முழுவதும். உத்தரட்டாதி நட்சத்திரம் முன்னிரவு 11.46 வரை. பின்னர் ரேவதி நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை தசமி. சித்தாமிர்த யோகம். மேல்நோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் மகம், பூரம். சுபநேரங்கள் காலை 9.15 – 10.15, மாலை 4.45 – 5.45 ராகுகாலம் 10.30 – 12.00 எமகண்டம் 3.00 – 4.30 குளிகைகாலம் 7.30 – 9.00 வாரசூலம் – மேற்கு (பரிகாரம் – வெல்லம்) திதி திரிதியை பிருக்கு, சுபமுகூர்த்த நாள்.
மேடம் : நன்மை, அதிர்ஷ்டம்
இடபம் : அச்சம், பகை
மிதுனம் : தனம், சம்பத்து
கடகம் : வெற்றி, அதிர்ஷ்டம்
சிம்மம் : பிரயாணம், செலவு
கன்னி : சினம், பகை
துலாம் : முயற்சி, முன்னேற்றம்
விருச்சிகம் : சுபம், மங்களம்
தனுசு : போட்டி, ஜெயம்
மகரம் : நலம், ஆரோக்கியம்
கும்பம் : உற்சாகம், மகிழ்ச்சி
மீனம் : கோபம், அவமானம்
திருமங்கையாழ்வார் அருளிய எட்டாம் திருமொழி “பள்ளியாவது பாற்கடல் அரங்கம் இரங்கவன் பேய்முலை பிள்ளையாய் உயிருண்ட எந்தை பிராணவன். பெருகுமிடம் வெள்ளியான் கரியன் மணிநிற வண்ணன் என்று எண்ணி நாள்தோறும் தெள்ளியள் வணங்கும் மலைத் திருவேங்கடம் அடைநெஞ்சமே! எம்பெருமான் பள்ளி கொள்ளுமிடம் திருப்பாற்கடலும் ஸ்ரீரங்கமுமாகும். பூதனையின் ஸ்தனங்களைக் குழந்தை வடிவில் உயிரோடு உறிஞ்சியவன். கிருதயுகத்தில் வெண்மையாகவும், திரேதாயுகத்தில் வெளுப்பும் கறுப்பும் கலந்ததாகவும் துவாபர யுகத்தில் நீலமணி போன்றும் கலியுகத்தில் பச்சை நிறமாகவும் இருப்பவன் அவனை வழிபட திருவேங்கடத்தை சென்று அடைவாயாக நெஞ்சமே (தொடரும்)
(“முன் கவனமுள்ள ஒரு நண்பன் உன்னிடம் இருப்பதைப் போல் வாழ்க்கையில் வேறு பாக்கியமில்லை” – யூரிபிடிஸ்)
சுக்கிரன், குரு ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண் : 9
பொருந்தா எண்கள் : 3–6–8
அதிர்ஷ்ட வர்ணங்கள் : பச்சை, மஞ்சள்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)