03.12.2019 ஸ்ரீ விகாரி வருடம் கார்த்திகை மாதம் 17 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை.
சுக்கிலபட்ச ஸப்தமி திதி பின்னிரவு 12.37 வரை. அதன்மேல் அஷ்டமி திதி. அவிட்டம் நட்சத்திரம் மாலை 4.14 வரை. பின்னர் சதயம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை ஸப்தமி. சித்தயோகம். கரிநாள். சுபம் விலக்குக. மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் புனர்பூசம், பூசம். சுபநேரங்கள்: பகல் 10.45 – 11.45 மாலை 4.45 – 5.45. ராகுகாலம் 3.00 – 4.30 எமகண்டம் 9.00 – 10.30 குளிகைகாலம் 12.00 –1.30. வாரசூலம் – வடக்கு (பரிகாரம் – பால்) நந்த ஸப்தமி, பல ஸப்தமி, சூரிய விரதம்.
மேடம் : நற்செயல், பாராட்டு
இடபம் : ஊக்கம், உயர்வு
மிதுனம் : செலவு, விரயம்
கடகம் : அமைதி, நிம்மதி
சிம்மம் : தெளிவு, நிம்மதி
கன்னி : தோல்வி, கவலை
துலாம் : அன்பு, பாசம்
விருச்சிகம் : உதவி, நட்பு
தனுசு : அன்பு, ஆதரவு
மகரம் : வெற்றி, அதிஷ்டம்
கும்பம் : உயர்வு, மேன்மை
மீனம் : நலம், ஆரோக்கியம்
திருப்பாணாழ்வார் ‘‘அமலனாதி பிரான்– வாயை வர்ணித்தல்’’. கொண்டல் வண்ணனை கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை அண்டர்கோன் அணிஅரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே’’. ‘‘கார்மேக நிறமுடையவன். ஆயர்பாடிக் கண்ணன். வெண்ணெய் உண்ட திருவாயன். துவாரகை வாசன். என்னுள்ளத்தைக் கொள்ளை கொண்டவன். அண்டர்க்கெல்லாம் அரசன். ஸ்ரீரங்கத்தில் உறைபவன். எனக்கு அமிர்தமாய் இருப்பவன். இவனைக்கண்ட கண்கள் வேறு எதையும் பார்க்காது’’.
(நாளை ‘திருமங்கையாழ்வார்’ தொட ரும்)
குரு, செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்: 9
பொருந்தா எண்கள்: 3 –6– 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை, மஞ்சள்.
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)