01.11.2019 ஸ்ரீவிகாரி வருடம் ஐப்பசி மாதம் 15 ஆம் நாள் வெள்ளிக்கிழமை
சுக்கிலபட்ச பஞ்சமி திதி பின்னிரவு 05.03 வரை. அதன்மேல் சஷ்டி திதி. மூலம் நட்சத்திரம் பின்னிரவு 02.28 வரை. பின்னர் பூராடம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை பஞ்சமி அமிர்தசித்தயோகம். சுபநேரங்கள் காலை 09.10 10.10 மாலை 04.45–05.45 ராகுகாலம் 10.30–12.00 எமகண்டம் 03.00–04.30 குளிகைகாலம் 07.30–09.00 வாரசூலம் மேற்கு (பரிகாரம் வெல்லம்) ஐயடிகள் காடவர் கோன்குருபூஜை. கந்தசஷ்டி விரதம் 05ஆம் நாள் கீழ்நோக்குநாள் சந்திராஷ்டம நட்சத்திரம் ரோகிணி.
மேடம் :உயர்வு, மேன்மை
இடபம் :சினம், பகை
மிதுனம் :அன்பு, பாசம்
கடகம் :போட்டி, ஜெயம்
சிம்மம் :பணம், பரிசு
கன்னி :நன்மை, அதிஷ்டம்
துலாம் :நலம், ஆரோக்கியம்
விருச்சிகம் :இன்பம், மகிழ்ச்சி
தனுசு :நம்பிக்கை, காரியசித்தி
மகரம் :புகழ், செல்வாக்கு
கும்பம் :லாபம், லக்ஷ்மிகரம்
மீனம் :விவேகம், வெற்றி
இன்று ஐப்பசி மூலம் மணவாள மாமுனிகள் திருநட்சத்திரம். வைஷ்ணவர்களில் தென்கலையினர் இரானுஜருக்கு அடுத்த நிலையில் இவருக்கே ஏற்றமளிப்பர். நம்மாழ்வார், இரானுஜர், மணவாள மா முனிகள் மூவரும் (பிரணவத்திற்கு) ஓம் என்ற சொல்லுக்கு ஒப்பானவர்கள் ஸ்ரீ வைஸ்ணவத்தை வளர்த்த குரவர் பிள்ளை லோகாச்சாரியன், திருவாய் மொழிப்பிள்ளையன் ஆகியோரின் மாணாக்கர். இவரை "ஜீயர்" என்ற சொல் குறிக்கும். இவர் நூல்களில் "ஆசார்யஹிருதலம்" சிறப்பானது. பலநூற்களுக்கு உரை எழுதிய இவர் இறுதியில் ஸ்ரீவைகுண்டத்தில் ஆசை பிறந்து "ஆர்த்தி பிரபந்தம்" செய்து ஸ்ரீவைகுண்டம் அடைந்தார்.
(பழி வாங்குவது இனிமையானது என்று முட்டாள்கள் நினைக்கின்றனர். ஜீவனர்)
சூரியன் சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிஷ்ட எண்கள் – 1, 5
பொருந்தா எண்கள் – 3, 8
அதிஷ்ட வர்ணங்கள் – பச்சை, மஞ்சள்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீவெங்கடேஸ்வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்தானம்)